மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன வாகனத்திலும் பவனி வருகின்றனர்.
வெண்ணிற அன்னம் தூய்மையின் அடையாளம், பாலும், தண்ணீரும் கலந்திருந்தாலும் பாலை மட்டும் அருந்தும் தன்மை கொண்டது. பாலும் நீருமாக உலகத்திம் நன்மை, தீமை கலந்தே இருக்கிறது. அன்னம் போல மனிதனும், நல்லதை மட்டும் பின்பற்ற வேண்டும் என்பதை உணர்த்த மீனாட்சி அன்ன வாகனத்தில் பவனி வருகிறாள் என்பது ஐதீகம்.
இன்று இரவு 7.00 மணிக்கு நான்கு மாசி வீதிகளில் சுந்தரேஸ்வரர் மீனாட்சியம்மன் வீதியுலா வரும் திருக்காட்சியை பக்தர்கள் அனைவரும் கண்டு களியுங்கள்.