சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம், சேனை முதல்வர் புறப்பாட்டுடன் வியாழக்கிழமை தொடங்கியது.
தொண்டை நாட்டு திருப்பதிகள் 22-இல் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பிரம்மோற்தவம் சித்திரை பெருந்திருவிழாவாக நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவம் வியாழக்கிழமை (ஏப்ரல் 19)தொடங்கியது. இவ்விழாவில் மே 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு, முதல் நாளான வியாழக்கிழமை சேனை முதல்வர் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ரிஷப லக்கினத்தில் பக்தோசித பெருமாள் திருமலைக்கு எழுந்தருளுதல் உற்சவம் நடைபெற உள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற சேனை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சியில் சேனை முதல்வர், 4 மாட வீதிகளில் அழைத்து செல்லப்பட்டு கோயிலுக்கு திரும்பிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், கோயிலின் செயல் அலுவலர் ச.சுப்பிரமணியம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் மற்றும் நகர முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.