திருமலையில் உள்ள எச்.டி. வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு கடைகள் எரிந்து சாம்பலாயின.
ஏழுமலையான் கோயில் எதிரில் எச்.டி. என்ற வணிக வளாகம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இவற்றில் 40 மற்றும் 41-ஆம் எண் கொண்ட கடைகளில் புதன்கிழமை நள்ளிரவு மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
இதில் இரண்டு கடைகளும் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து தகவல் அறிந்த தேவஸ்தான தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அரை மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.