திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று கருடசேவை நடந்தது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இந்தாண்டுக்கான பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை, மாலை என இரு வேளையிலும் வாகனங்களில் உற்சவர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று கருட சேவை நடைபெற்றது. காலை கருட வாகனத்தில் வீரராகவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.