சென்னை நகரில் விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள நடேச நகர் சிவவிஷ்ணு ஆலயத்தில் ஏப்ரல் 20-ம் தேதியன்று ஸ்ரீசங்கர ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.
அன்று காலை பிரசன்ன விநாயகருக்கும், மகா பெரியவர் உற்சவ திருமேனிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
ஏப்ரல் 20 அன்று மாலை சின்மையாநகரில் உள்ள ஸ்ரீஹரிஹர தியான மண்டபத்தில் ஸ்ரீஆதிசங்கரர் திருஉருவ படத்திற்கு முன் சதுர்வேத பாராயணம், ஸ்ரீருத்ரம், சங்கர அஷ்டோத்திரம் ஆகியவை பாராயணம் செய்யப்பட்டது. பின்னர் ஸ்ரீஆதிசங்கரர் படம் ஊர்வலமாக புறப்பட்டு நடேச நகர் வீதி உலா வந்து ஸ்ரீசிவவிஷ்ணு ஆலயம் வந்து சேர்ந்தது.
பக்தர்கள் ஜெய ஜெய சங்கரா, ஹரஹர சங்கரா என்று பக்தியுடன் பாராயணம் செய்து உடன் வந்தனர். ஆலயத்தில் ஸ்ரீமத் சங்கர பகவத் பாதாளுக்கு சிறப்பு அர்ச்சனையுடன் தோடகாஷ்டம நமஸ்காரமும் நடைபெற்றது.
சங்கர ஜெயந்தி விழாவினை ஸ்ரீ குரு பாதுகா சமாஜம் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு ஸ்ரீமத் சங்கர பகவத் பாதாளின் அருளாசியைப் பெற்று மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர்புக்கு - 9840094246
தகவல் - கி.ஸ்ரீதரன்