பிரம்ம முகூர்த்தத்தில் செய்யும் காரியங்கள் ஜெயமாகுமா?

பிரம்ம முகூர்த்தத்தில் செய்யும் காரியங்கள் ஜெயமாகுமா?

பெரும்பாலும் இந்துக்கள் தேதி, கிழமை, நல்ல நாள், யோகம் ஆகிய அனைத்தும் சரியாக இருந்தால் தான் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குவார்கள்.

பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரை. 

பெரும்பாலும் இந்துக்கள் தேதி, கிழமை, நல்ல நாள், யோகம் ஆகிய அனைத்தும் சரியாக இருந்தால் தான் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குவார்கள்.  நல்ல நாள் கிடைத்தால், நல்ல நேரம் கிடைக்காது, அதனால் நாம் செய்ய நினைக்கும் காரியங்கள் அனைத்தும் ஏதாவது தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இவற்றைத் தவிர்க்க நாம் பிரம்ம முகூர்த்தத்தைத் தேர்வு செய்யலாம். 

அமாங்க....பிரம்ம முகூர்த்தத்தில் செய்வதாக இருந்தால் நல்ல நாள் பார்த்தால் மட்டும் போதும் நேரம் பார்க்க தேவையில்லை. எந்த ஒரு நல்ல காரியத்தையும் பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கலாம். இந்த அதிகாலை நேரத்துக்கு அவ்வளவு மகிமை. 

அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்குப் புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கின்றன.

கண்கள் ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. அதனால் தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால், அன்றைய தினம் நல்லெண்ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இந்த அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்கியமாக இருக்கும். மனஅழுத்தம் இல்லாமலும், பரபரப்பில்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண் விழிப்பதாகும். உஷத்காலம் உஷஸ் என்னும் பெண் தேவதையைப்பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறான்.

இதனாலேயே விடியற்காலை நேரம் உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாய்வதால் தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுவது விஷேசமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாகக் காணப்படுகிறது. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில்எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

தொழில் தொடங்குதல், கணபதி ஹோமம், கிரகப்பிரவேசம், திருமணம், என எந்த ஒரு காரியத்தையும் பிரம்ம முகூர்த்தத்தில் செய்யலாம். அது கட்டாயம் வெற்றியில் முடியும். 

கிரக தோஷம், ராகு, கேது தோஷம், களத்திர தோஷம் இருப்பவர்கள் தோஷ பரிகாரம் செய்வதுமட்டுமல்லாமல், இவர்களுக்கு அதிகாலை அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் செய்தால் தம்பதிகளுக்கிடையே பிரிவினை ஏற்படாது, அவர்களின் வாழ்வு சிறக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com