இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும்?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 24 - ஆகஸ்ட் 30) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும்?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 24 - ஆகஸ்ட் 30) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உங்கள் குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய நட்புகள் உருவாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வசீகரமான பேச்சினால் பிறரைக் கவர்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உத்தியோகஸ்தர்கள் அதிகமாக உழைக்க வேண்டி வரும். ஆனாலும் பணவரவில் எந்த சங்கடமும் ஏற்படாது. 

சக ஊழியர்கள் நட்புடன் இருப்பர். வியாபாரிகளுக்கு தொழிலில் ஏற்பட்ட மந்தநிலை விலகும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். விவசாயிகள் போட்டிகளை சந்திக்க நேரிடும். உடன் உழைப்போரை அனுசரித்துச் செல்லவும்.

அரசியல்வாதிகள் புதிய யுக்தியுடன் கட்சிப் பணிகளைச் செய்வீர்கள். இதனால் கட்சி மேலிடம் உங்கள் மீது கவனம் செலுத்தும். கலைத்துறையினருக்கு தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்மணிகள் குழந்தைகளில் உடல்நலனில் அக்கறை காட்டவும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டும் ஈடுபடவும்.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து நலம் பெறவும். 

அனுகூலமான தினங்கள்: 24,25. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

வாழ்க்கை வசதிகள் பெருகும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தெய்வ சிந்தனைகள் மேலோங்கும். மற்றவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். பொருளாதாரம் சிறப்பாக அமையும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களிடம் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் அனுகூலமானத் திருப்பங்களைக் காண்பீர்கள். எவருக்கும் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்கும் எண்ணம் வேண்டாம்.

விவசாயிகள் சந்தையில் உள்ள போட்டிக்கு ஏற்றவாறு விலையை நிர்ணயித்து பலன் பெறுவீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்பட்டாலும் இறுதியில் எடுத்த காரியங்கள் சாதகமாக முடியும். 

கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு பொருளாதார நிலை சீராக இருக்கும். மாணவமணிகளுக்கு நவீன விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட படிப்புகளில் ஈடுபாடு அதிகரிக்கும். 

பரிகாரம்:  "ஜெய ஜெய துர்க்கா' என்று ஜபித்தபடி துர்க்கையை வணங்கவும். 

அனுகூலமான தினங்கள்: 24, 26.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளில் சிக்கல்கள் உருவானாலும் முடிவு சுபமாகவே இருக்கும். வாகனம் வாங்கும் எண்ணத்தைத் தள்ளிப்போடவும். செய்தொழிலில் புதிய முன்னேற்றத்தைக் காணலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைத் திட்டமிட்டு முன்கூட்டியே செய்யவும். 

வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் வருகை நல்ல முறையில் இருக்கும். ஓய்வில்லாமல் உழைத்து லாபத்தை அள்ளுவீர்கள். விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பீர்கள். கால்நடைகளை வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்த முயல்வீர்கள். 

அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் அனைவரையும் திருப்திபடுத்தும். கடினமான வேலைகளை வெற்றிகரமாக முடித்து புதிய பொறுப்புகள் பெறவும். கலைத்துறையினர் உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகம் பெறுவீர்கள். பெண்மணிகள் கணவரின் ஆதரவுடன் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டவும். பாடங்களை போதிய பயிற்சியுடன் படித்து முடிக்கவும்.

பரிகாரம்:  வியாழனன்று குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 26,27. 

சந்திராஷ்டமம்: 24,25.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

அனைத்து காரியங்களிலும் வெற்றிவாகை சூடுவீர்கள். செய்தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் அந்தஸ்து, மதிப்புக்கு எந்த குறையுமில்லை. வெளியூரிலிருந்து உதவிகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் நல்ல பலனைக் காண்பீர்கள். 

மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகளும் தென்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிறுமுதலீடுகளும் செய்வீர்கள். விவசாயிகள் போட்டி, பொறாமைகளைச் சந்திக்க நேரிடும். கடுமையாக உழைத்தால் எதிர்பார்த்த வெற்றி கிட்டும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். அதனால் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் மனநிம்மதி அடைவீர்கள். வெளிநாட்டுப் பயணங்கள் செய்வீர்கள். பெண்மணிகள் குடும்பத்துடன் உல்லாசப் பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவமணிகள் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள். 

பரிகாரம்:  திங்கள் கிழமைகளில் அம்மன் தரிசனம் உகந்தது. 

அனுகூலமான தினங்கள்: 25, 28.

சந்திராஷ்டமம்: 26, 27.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உங்களின் நீண்ட கால எண்ணங்கள் நிறைவேறும். உற்றார் உறவினர்களிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அதனை ஈடுகட்டும் வகையில் வருமானம் வந்து கொண்டிருக்கும். கடின உழைப்பிற்குப்பிறகே வெற்றிதேடி வரும்.

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் நட்புடன் நடந்து கொள்வார்கள். பணவரவிற்குக் குறைவு இருக்காது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பாக முடியும். கூட்டாளிகள் உங்களிடமிருந்து சற்று ஒதுங்கி இருப்பார்கள். விவசாயிகள் கூடுதல் விளைச்சலைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். 

அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய நேரமிது. கட்சி மேலிடத்தின் உத்தரவை நிறைவேற்ற முனைப்புடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினரின் முயற்சிகள் வெற்றி பெறும். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். ஆசிரியர்களிடம் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

பரிகாரம்:  தினமும் "ராம ராம' என்று 108 முறை எழுதி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 24,27.

சந்திராஷ்டமம்: 28, 29, 30.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலைகளில் சிறிது அலைச்சல்கள் இருந்தாலும் முடிவு நல்லபடியாகவே அமையும். நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்யும் நிலையிலேயே இருப்பார்கள். எனவே, புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவேண்டாம். உடன்பிறந்தோரிடம் பக்குவமாகப் பேசுவது நல்லது.

உத்தியோகஸ்தர்கள் சிறிய அளவு முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பீர்கள். வியாபாரிகள் துணிந்து முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு பலன் பெறலாம். வாய்க்கால் வரப்பு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கை தேவை.

அரசியல்வாதிகளுக்கு யோசித்து எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சாதகமாக அமையும். கட்சியில் எவரிடமும் வெளிப்படையாகப் பழக வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் செய்து கொள்வதில் சில சிரமங்கள் ஏற்படும். பெண்மணிகள் தங்கள் வேலைகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். அனைவரும் பாராட்டுவர். 

மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

பரிகாரம்:  கால பைரவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 25, 28. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

தர்ம சிந்தனைகள் மேலோங்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நல்லபடியாக நிறைவேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடல் நலம் சீராகும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அவசியம் ஏற்பட்டாமொழிய பயணங்களைச் செய்ய வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைக்க முயற்சிக்கவும். வேலைகளைப் பிறகு செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தைத் தவிர்க்கவும். கையிருப்புப் பொருள்களை பத்திரப்படுத்தவும். வியாபாரிகள் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சிப்பீர்கள். 

விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். வரவும் செலவும் சரியாக இருப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். அரசியல்வாதிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். கொடுத்த பொறுப்புகளை கவனத்துடன் செய்து முடிக்கவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பண வரவுக்குக் குறைவு இருக்காது. 

பெண் மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பீர்கள். மாணவமணிகள் அறிவியல் கல்வியில் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பரிகாரம்:  செந்திலாண்டவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 26, 28.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதாரம் நன்றாக இருக்கும். அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். உங்கள் ஆற்றல் பளிச்சிடும். புத்திசாலித்தனம் கூடும். சமுதாயப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மற்றவர்கள் உங்களைப் புகழ்வார்கள். சுற்றுலா செல்வது போன்றவற்றைக் குறைத்துக் கொள்வது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். பார்த்து கவனமாக நடந்து கொள்ளவும். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகும். வியாபாரிகளின் ஆற்றல் அதிகரிக்கும். புதிய யுக்திகளை செயல்படுத்துவீர்கள்.  விவசாயிகள் எதையும் முன்னெச்சரிக்கையுடன் ஆராய்ந்து செயல்படுத்துவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். தொண்டர்களை அனுசரித்துச் சென்று காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும். கலைத்துறையினருக்கு பணவரவு அதிகரிக்கும். சிறந்த வாய்ப்புகள் தேடிவரும். பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். மாணவமணிகள் பாடங்களை ஆழ்ந்து படிக்கவும். பெற்றோர் உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவர்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 25, 28.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிம்மதியும் தாண்டவமாடும். வேலைகளில் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். உடன்பிறந்தோரால் நன்மை அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

எதிரிகளும் நேசக்கரம் நீட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மனதை அரித்து வந்த பிரச்னைகள் விலகும். உங்கள் சமயோசித புத்தியை அனைவரும் பாராட்டுவர். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல்கள் சுமுகமான நிலையை உருவாக்கும். கூட்டுத்தொழிலில் ஒற்றுமை குறைந்தாலும் வெற்றி பெறுவீர்கள். 

விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். கட்சி மேலிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினர்தம் கடமையை உணர்ந்து செயல்படுவார்கள். சக கலைஞர்களிடம் உதவிகளைப் பெறுவீர்கள்.

பெண்மணிகள் பொருளாதார அபிவிருத்தியால் ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் நீண்டகால திட்டங்கள் தீட்ட இது உகந்த நேரம்.

பரிகாரம்:  ராமபிரானையும் ராமபக்த அனுமனையும் வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 29,30.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதார வளம் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். அதனால் சிக்கன நடவடிக்கை தேவை. ஸ்பெகுலேஷன் துறையிலும் அதிக லாபம் எதிர்பார்க்க முடியாது. இருக்கும் வீட்டிற்கு சிறிது பராமரிப்புச் செலவு செய்ய நேரிடும்.

குடும்பத்தில் நிம்மதி நிலவும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நட்பாகப் பழகி உபரி காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரிகள் பொறுமையுடனும் பொறுப்புடனும் லாபத்தைப் பெருக்குவர். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் சிறப்பாக இருக்கும். கால்நடைகளுக்குப் பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகள் வீண் விவகாரங்களில் வாயைக்கொடுத்து மாட்டிக்கொள்ள நேரிடும். கட்சிப்பணிகளில் எச்சரிக்கை உணர்வுடன் ஈடுபடவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். ரசிகர்களின் ஆதரவுண்டு.

பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்தகருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளுக்கு திடீர் செலவுகள் செய்ய நேரிடும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில்மட்டுமே ஈடுபடவும். 

பரிகாரம்: வளசரவாக்கம் ஸ்ரீ வேங்கட சுப்ரமண்யரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 24, 28.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சுமாராகவே இருக்கும், இருப்பினும் உடல்நலம் சீராகவே இருக்கும். எவருக்கும் முன்ஜாமீன் போடுவது அல்லது வாக்கு கொடுப்பதைத் தவிர்க்கவும். நேர்வழியில் செய்யும் காரியங்கள் மட்டுமே வெற்றியைத் தரும். பயணங்களால் நன்மை உண்டு.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு அதிகரிக்கும். செய்கின்ற வேலைகளில் சிறுசிறு குறைகள்உண்டாகும். சக ஊழியர்களை நம்பிஎந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகள் லாபத்தைக் காண்பீர்கள். புதிதாக முதலீடு செய்யாமல் வியாபாரத்தை விரிவுபடுத்தவும். விவசாயிகளுக்கு மகசூல் குறையும். புதிய பயிர்களை உற்பத்தி செய்ய வேண்டாம்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்தில் குறைபாடுகள் உண்டாகும். தொண்டர்களின் பாராமுகத்தால் கோபமடையாமல் செயலாற்றவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். ரசிகர்களின் ஆதரவுடன் கலை நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். பெண்மணிகளுக்குக் கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றமடைவீர்கள்.

பரிகாரம்: மதுரை மீனாட்சியை தரிசனம் செய்வது உகந்தது. 

அனுகூலமான தினங்கள்: 25, 30.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

செய்தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். உங்கள் உழைப்பு வீண் போகாது. தோற்றத்தில் பொலிவு உண்டாகும். முக்கிய எண்ணம் ஒன்று ஈடேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு செலவுகள் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் நீங்கும். அலுவலக வேலைகளில் சந்தோஷமாக ஈடுபடுவீர்கள். வியாபாரிகள் வீண் ஆசாபாசங்களை வளர்த்துக்கொள்ள வேண்டாம். திட்டமிட்ட வேலைகளை சற்று ஒத்தி வைக்கவும். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உங்கள் கோரிக்கைகளைத் தலைமையிடம் கூறிவிட்டு அமைதி காக்கவும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கலையில் ஆர்வம் வளரும். பெண்மணிகளுக்கு இந்த காலங்களில் நல்ல கெட்டது இரண்டும் கலந்துவரும். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்களும் பெற்றோரும் உங்களை ஊக்கப்படுத்துவார்கள்.

பரிகாரம்: பார்வதி தேவியையும் சிவபெருமானையும் வணங்கவும். 

அனுகூலமான தினங்கள்: 29, 30.

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com