திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோயிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 27 வரை நடைபெறவுள்ள திருக்கார்த்திகை தீபப் பெருவிழாவினை முன்னிட்டு, பூர்வாங்க பணிகளுக்காக இன்று காலை ராஜகோபுரம் முன்பு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா! அண்ணாமலையாருக்கு அரோகரா! என்று கோஷத்துடன் வழிபட்டனர்.