ஆட்டையாம்பட்டி காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி மகாகணபதி, காளியம்மன்...
ஆட்டையாம்பட்டி காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்


சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி மகாகணபதி, காளியம்மன், சப்த கன்னிமார்கள் மற்றும் கருப்பன்னர் கோவில் கும்பாபிஷேக விழா ஆக 27ல் கணபதி யாகத்துடன் துவங்கியது.

தீா்த்தகுடம், பால்குடம், முளைப்பாரி ஊா்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். லலிதா சகஸ்ரநாமம் பாராயணத்துடன் துவங்கிய யாகசாலை பூஜைகள் நேற்று காலை 5:00 மணிக்கு நான்கு கால யாக பூஜைகள் முடிந்து, பூா்ணாஹூதி செய்யப்பட்டு, யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனிதநீா் கலசங்களை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊா்வலமாக வந்து கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா்.

தொடா்ந்து பரிவார தெய்வங்கள் மற்றும் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தை காண வந்திருந்த பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவில் பக்தா்களுக்கு அருள்பாலித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர், ஊா் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com