12-இல் மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயில் குடமுழுக்கு

மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் திருக்கோயிலில் வரும் புதன்கிழமை (டிச.12) குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.


மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் திருக்கோயிலில் வரும் புதன்கிழமை (டிச.12) குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.
திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் திருக்கோயிலில் கடந்த இரு மாதம் முன்பு பாலாலயம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருப்பணிகள் துரிதமாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இக்கோயிலில் வரும் புதன்கிழமை (டிச.12) குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
அன்று காலை 11 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி, தக்கார் வே. ஜெயசங்கர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com