கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி சிவன் கோயில்களில் இன்று சங்காபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
கார்த்திகை மாதம் மூன்று சோமவாரம் நிறைவடைந்த நிலையில், இன்று கடைசி சோமவாரம் ஆகும். உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில் 108 வலம்புரி சங்குகள் சிவ லிங்க வடிவில் அமைக்கப்பட்டன. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
சென்னை, பாரிஸ் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.