வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7ஆம் நாள்: சூரிய, சந்திரப்பிரபை வாகனங்களில் பத்மாவதி தாயார் மாடவீதி புறப்பாடு

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7ஆம் நாளான திங்கள்கிழமை தாயார் சூரிய, சந்திரப்பிரபை வாகனங்களில் மாட வீதியில்
வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7ஆம் நாள்: சூரிய, சந்திரப்பிரபை வாகனங்களில் பத்மாவதி தாயார் மாடவீதி புறப்பாடு

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7ஆம் நாளான திங்கள்கிழமை தாயார் சூரிய, சந்திரப்பிரபை வாகனங்களில் மாட வீதியில் வலம் வந்தார். 
இக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அதன் 7ஆம் நாளான திங்கள்கிழமை காலையில் தாயார் சூரியப் பிரபை வாகனத்தில் செந்நிற மாலைகளை அணிந்தபடி திரிவிக்ரம அவதாரத்தில் மாட வீதியில் வலம் வந்தார். அதன்பின் தாயாருக்கு பால், தயிர், தேன், பழரசங்கள், மஞ்சள், சந்தனம், செஞ்சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. 
பின்னர் மாலை 5.30 மணிக்கு 1008 விளக்குகளுக்கிடையில் ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது. இரவு 8 மணிக்கு சந்திரப் பிரபை வாகனத்தில் தாயார் மாட வீதியில் வலம் வந்தார். இதைக் காண பக்தர்கள் மாட வீதியில் திரண்டனர். வாகனச் சேவை அருகில் வந்தபோது பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
இந்த நிகழ்வில் அர்ச்சகர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர். வாகனச் சேவைக்கு முன்னால் அன்னமாச்சார்யா திட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com