இந்த வாரம் எப்படி இருக்கப்போகிறது? வாங்க பார்க்கலாம்!

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (டிசம்பர் 14 - டிசம்பர் 20 ) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர்....
இந்த வாரம் எப்படி இருக்கப்போகிறது? வாங்க பார்க்கலாம்!

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (டிசம்பர் 14 - டிசம்பர் 20 ) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
உறவினர்களை அரவணைத்துச் செல்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய நட்புகள் உருவாகும். உங்கள் நம்பிக்கைகள் பலப்படும். மனச்சோர்வுக்கு ஆளாகாமல் உழைப்பீர்கள். தேக ஆரோக்கியம் சீராகும். சில விஷயங்களில் தெளிவான முடிவெடுப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் இடையூறுகளைச் சமாளித்து  அனைத்து வேலைகளையும் முடிப்பார்கள். பணவரவுக்கும் தடைகள் வராது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் பலன் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப்பயிர்களை உற்பத்தி செய்து பலன் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கலைத்துறையினர் புதிய வெற்றிகளைக் காண்பார்கள். ரசிகர்களின் ஆசையை பூர்த்திச் செய்வீர்கள். 

பெண்மணிகள் அனைவரிடமும் கவனத்துடன் பழகவும். குடும்பத்தில் நடைபெறும் சுபகாரியங்களில் குழப்பம் ஏற்படலாம். 

மாணவமணிகள் கல்வியில் வளர்ச்சி அடைவதற்கான சீரிய முயற்சிகளை எடுக்க வேண்டிய நேரமிது.

பரிகாரம்: ஸ்ரீ பார்வதி - பரமேஸ்வரரையும், லட்சுமி நாராயணரையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 14, 15. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

ஆற்றல் அதிகரிக்கும். செயல்கள் திட்டமிட்ட படியே நடந்தேறும். குடும்பத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் தொகை வந்து சேரும். காரியங்களில் இடையூறுகள், குழப்பங்கள் இருந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். கொடுத்த வேலைகளை நன்கு செய்வீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பொருள்களின் விற்பனை நல்ல முறையில் நடக்கும். விவசாயிகள் எதிர்பாராத மகசூல் கிடைத்து, பொருளாதார முன்னேற்றம் அடைவீர்கள். கால்நடைகளால் பலன்கள் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களை நாடிவரும். பயணங்களால் நன்மை உண்டாகும். கலைத்துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளில்  ஈடுபடுவீர்கள்.

பெண்மணிகள் கணவரை அனுசரித்துச் செல்லவும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் கடுமையாக உழைத்துப் படித்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளலாம்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி, பலன் பெறுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 14,16. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அதற்கேற்றபடி உறவினர்களிடம் அனுசரித்துச் சென்றால்தான் நல்லது. ஆனால் அவர்களின் எதிர்ப்பு, அலட்சியப்போக்கு மனதிற்கு வேதனையை கொடுக்கும். பொருளாதாரத்தில் சிறப்பைக் காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். ஆனால் மேலதிகாரிகளால் எந்த கெடுபிடிகளும்  இராது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நல்ல முறையிலேயே நடக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் கைகூடும். விவசாயிகள் இந்த காலகட்டத்தில் சரியான முன்னேற்றத்தைக் காண்பது அரிது. 

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலையமையாது. மனதில் ஏற்படும் சஞ்சலமும் மேலிடத்தின் அதிருப்தியும் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும். கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். 

பெண்மணிகள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளைத் தவிர்க்கலாம். மற்றவர்களை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். ஆனால் ஆசிரியர்களின் ஆதரவுடன் முன்னேற்றம் ஏற்படும்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 15,16. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். நினைத்த ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெரியவர்களின் ஆசியுடன் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் வகையில் மனத்தாங்கல்கள் ஏற்படலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாகவே இருக்கும். அதனால் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு பல வகையிலும் லாபம் வரும். செலவு செய்யும் நேரத்தில் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு வரவேண்டிய குத்தகை பாக்கிகள் கிடைக்கும். பயிர்விளைச்சலில் பாதிப்பு இராது. 

அரசியல்வாதிகளுக்கு அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றமான, சூழல் அமையும். மனதில் ஏற்படும் சஞ்சலமும் மேலிடத்தின் அதிருப்தியும் குழப்பத்தில் ஆழ்த்தும். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகே ஒப்பந்தங்கள் கைகூடும். 

பெண்மணிகளுக்கு கணவர் வழி உறவினரிடையே இருந்து வந்த சலசலப்புகள் குறையும். மாணவமணிகள் நேரம் சாதகமாக இருப்பதால் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளலாம்.

பரிகாரம்: சனீஸ்வரரை வணங்கவும். ஏழைகளுக்கு இயன்ற உதவிகள் செய்யவும். 

அனுகூலமான தினங்கள்: 16,17. 

சந்திராஷ்டமம்: 14, 15.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

முன்னேற்றத்திற்குத் தடை வராது. தெய்வ பலம் கூடும். தொழிலில் வெற்றி உண்டாகும்., எடுத்த காரியங்களைக் குறித்த காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். உறவினர்கள் நட்புடன் பழகுவார்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகச் சூழல் சாதகமாகவே அமையும்.  துணிந்து காரியமாற்றுங்கள். பணவரவு சுமாராகவே இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சிரமங்கள் இருக்கும். கடையை விரிவுபடுத்தி வியாபாரத்தைப் பெருக்கும் எண்ணத்தைத் தள்ளிப்போடுங்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். மாற்றுப்பயிர்களை உற்பத்தி செய்து பலன் பெறுங்கள்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். சமுதாயப்பணி செய்து, மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பது சிரமமே. ரசிகர்களை அரவணைத்துச் செல்லுங்கள். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு, மரியாதைகள் கூடும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் குறையும். நெடுநாளையக் கோரிக்கை ஒன்று நிறைவேறும்.

பரிகாரம்: பெருமாளுடன் தாயாரையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 14, 18. 

சந்திராஷ்டமம்: 16, 17.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தாமதமானாலும் உங்கள் முயற்சிகள் சிறிது இழுப்பறிக்குப்பிறகே வெற்றி பெறும். மற்றவர்களைச் சார்ந்து செயலாற்றிய நீங்கள் சுயமாகச் செயலாற்றும் காலமிது. தைரியமாக திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். பணவசதி சரளமாக இருக்காது. 

உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியாது. ஊதிய உயர்வு விரும்பிய இடமாற்றம் கிடைக்காது. வியாபாரிகள் தங்கள் பிரச்னைகளை வெளியில் காட்டாமல் சாதுர்யமாகச் சமாளிக்கவும். கூட்டாளிகளிடம் உங்கள் செல்வாக்கு கூடும். விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் சுமாரான பலனைத் தரும். கால்நடைகளால் லாபமில்லை.

அரசியல்வாதிகள் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி வாகை சூடாமல் சில பிரச்னைகளுக்கு ஆளாவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வராது. உங்கள் முயற்சியை மேம்படுத்திக் கொள்ளவும்.

பெண்மணிகள் கணவரிடம் அனுசரித்துச் செல்லவும். குடும்பத்தினரிடம் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை தேவை. மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படாது. இதனால் மதிப்பெண்கள் குறையும்.

பரிகாரம்: பார்வதி தேவியை தீபமேற்றித் தரிசிக்கவும். 

அனுகூலமான தினங்கள்: 15, 20. 

சந்திராஷ்டமம்: 18, 19.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உடல்நலம் சீராக இருக்கும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுவீர்கள். திட்டமிட்ட வேலைகளில் வீண் அலைச்சல்களும் அநாவசியச் செலவுகளும் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை மிகுந்த கவனத்துடன் செய்து முடிப்பீர்கள். பணவரவிற்கும் குறைவு வராது. வியாபாரிகள் லாபம் காணும் காலகட்டமிது. கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. விவசாயிகளுக்கு புதிய குத்தகை முயற்சிகள் வெற்றி பெறும். வழக்குகளிலும் சாதகமான திருப்பங்களைக் காண்பீர்கள். 

அரசியல்வாதிகளின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தொண்டர்களிடம் எதிர்பார்த்த ஆதரவுகளைப் பெறமுடியாது. கலைத்துறையினர் வாய்ப்புகளைக் கடும் போட்டிக்குப்பிறகே பெறுவார்கள். பெண்மணிகள் சிறிய விபத்துக்கு ஆளாக நேரிடலாம். கவனத்துடன் இருக்கவும். மாணவமணிகள் படிப்பில் முழுமையான கவனத்தைச் செலுத்தினால்தான் படிப்பில் முன்னேற்றத்தைக் காணமுடியும்.

பரிகாரம்: புதன் கிழமைகளில் ஸ்ரீராமரையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 16,19. 

சந்திராஷ்டமம்: 20.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

எதிர்பார்த்த  பணவரவும் உழைப்புக்கேற்ற பலனும் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஒரு பெரிய சாதனைக்கு  அடித்தளமாக அமையும். உபரி வருமானத்தைக் கொண்டு பூமி வாங்குவீர்கள். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகளும் நலம் தரும்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகள் யாவையும் கருத்துடன் செய்து முடிப்பார்கள். அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்வார்கள். வியாபாரிகளுக்கு லாபம் குறைவாகவே கிடைக்கும். கூட்டாளிகளை கலந்தாலோசித்த பிறகே, புதிய முயற்சிகளில் இறங்கவும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். பழைய குத்தகை முடித்து அதற்கேற்ற வருமானம் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு செய்ய எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பார்கள். பலருடைய பாராட்டையும் பெறுவீர்கள். சிலர் உயர் பதவிகளை அடைவார்கள். கலைத்துறையினரைத்தேடி புதிய வாய்ப்புகள் வரும். நீண்டகால உழைப்பிற்கு அங்கீகாரமும் கிடைக்கும்.

பெண்மணிகள் இல்லத்தில் நிகழ்ச்சியைக் காண்பார்கள். கணவரிடம் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். மாணவமணிகள் நன்றாகப் படித்து மதிப்பெண்களை அள்ளுவார்கள்.

பரிகாரம்: ஞாயிறன்று சூரியபகவானை வழிபட்டு ஆத்ம பலத்தைக் கூட்டிக் கொள்ளவும். 

அனுகூலமான தினங்கள்: 17, 18. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}


தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். கவலைகள் சில இருந்து கொண்டுதான் இருக்கும். உங்கள் மதிப்பு மரியாதையை தக்க வைத்துக் கொள்ள மௌனமாக இருத்தலே நன்று. எல்லாவற்றிலும் பிறரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைக் குறித்த நேரத்தில் முடித்தால்தான் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறமுடியும். சக ஊழியர்களும் உதவ வேண்டுமெனில் அனைவரையும் அனுசரித்து நடந்துகொள்ளவும். 

வியாபாரிகளுக்கு பழைய கடன்கள் வசூலாகி புதிதாக கடன்கள் உருவாகும் சூழ்நிலை ஏற்படும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். நீர்ப்பாசன வசதிகளை பெருக்கிக்கொள்ளவும். 

அரசியல்வாதிகளுக்கு தொண்டரிகளின் ஆதரவு குறையும். எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். 

கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் பெறுவார்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மனநிம்மதி குறையும். உற்றார் உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்காது. 

மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். நல்ல மதிப்பெண்களைப் பெற கடுமையான உழைப்பு தேவை.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வணங்கவும்.

அனுகூலமான தினங்கள்: 16, 17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}


மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தோல்விகள் அகன்று வெற்றிகள் குவியும். செயல்கள் சரியான இலக்கை அடையும். ஆன்மிகத்தில் சாதனை புரிவீர்கள். புனித பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணிகள் சுமுகமாக முடியும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய யுக்தியுடன் செயல்பட்டு வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கூட்டாளிகளின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் மிகுந்த லாபம் கிடைக்கும். கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல வருமானம் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை எளிதாக முடித்து வெற்றி பெறுவீர்கள். கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். கலைத்துறையினருக்கு முயற்சிகள் யாவும் வெற்றி உண்டாகும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். 

பெண்மணிகள் கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். குழந்தைகளால் சந்தோஷமடைவீர்கள். மாணவமணிகள் படிப்பில் அக்கறை கொண்டு நன்கு படித்து சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள்.

பரிகாரம்: பிரதி சனிக்கிழமைகளில் சனீஸ்வரரையும் காக்கைக்கு எள் அன்னம் வைத்தும் வழிபடுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 15, 17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}


கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சற்று மந்தமாகத்தான் இருக்கும். தர்ம சிந்தனைகள் மேலோங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அளவாகத்தான் இருக்கும். உற்றார் உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிரிகளை கண்டுகொண்டு ஜாக்கிரதையாக பழகவும்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் சிறிதளவே நிறைவேறும், மனதை பிரச்னைகள் அரித்து வரும். மேலதிகாரிகள் வகையிலும் சில கெடுபிடிகள் தோன்றும். வியாபாரிகளின் கடன் வசூல் மிகவும் நிதானமாகவே நடந்தேறும். உழைத்து வருமானத்தை பெருக்கிக் கொள்ளுங்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் சுமாராகவே இருக்கும். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். 

அரசியல்வாதிகளின் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். மேலிடத்திடம் எதிர்பாராத பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராகவே இருக்கும். திறமைகளை வளர்த்துக்கொள்வது நல்லது. 

பெண்மணிகளுக்கு கணவரின் உறவினர்களால் நன்மை உண்டாகும். யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். மாணவமணிகள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவர். கடுமையாக படித்து எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவர்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வரரையும் பைரவரையும் வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 14, 19. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பெரிய திருப்பங்கள் ஏற்படும். ஆனாலும் பணவரவு சரளமாக இருக்கும். காரியங்கள் அனைத்தையும் வெற்றியுடன் முடிக்கும் ஆற்றல் உண்டாகும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.  குடும்பத் தலைவரின் உடல்நலம் சிறிது பாதித்தாலும் மீண்டும் சரியாகி விடுவார்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு என்பது இராது. அனைத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் சீராக இருக்கும். மறைமுகப் போட்டிகளை மிக்க சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். விளைச்சல் அதிகரித்து பலன் பெறவும். 

அரசியல்வாதிகளைத் தேடி புதிய பொறுப்புகள் வந்து சேரும். எந்த வம்பிலும் மாட்டிக்கொள்ளாமல் பேச்சிலும் செயலிலும் நிதானமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்களை முடித்துக்கொடுப்பதில் தடைகள் ஏதும் ஏற்படாது. பெண்மணிகளைத் தேடி இனிப்பான செய்திகள் வரும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். 

மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் உண்டாகி நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.  ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பாராட்டும் பெறுவீர்கள்.

பரிகாரம்: விநாயகரையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 19, 20. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com