புதுப்பட்டினம் ஞான சித்தர் கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் ஞான சித்தர் கோயிலில் செவ்வாய்க்கிழமை மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் அருள் புரியும் உற்சவர்.
வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் அருள் புரியும் உற்சவர்.

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் ஞான சித்தர் கோயிலில் செவ்வாய்க்கிழமை மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி ஜெயநாராயணீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு முழுவதும் ஒவ்வொரு காலத்துக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து புதன்கிழமை அதிகாலை வரை ஆறுகால அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு ஓங்காரநந்தா சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோட்டீஸ்வரானந்த சுவாமிகள் மற்றும் கோயில் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.
செங்கல்பட்டை சுற்றியுள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரியை யொட்டி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணிவரை 4 கால பூஜைகளுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 
செங்கல்பட்டு வ .உ.சி தெருவில் உள்ள காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயில், அண்ணாநகர் எல்லையம்மன் கோயிலில் உள்ள யோகேஸ்வரி சமேத யோக நாதேஸ்வரர் கோயில், ரத்தின விநாயகர் கோயிலில் உள்ள சிவன் சந்நிதி, வேதாசல நகர் வீரபத்திர சுவாமி கோயில், என்ஜிஜிஓ நகரில் உள்ள சித்திவியாகர் கோயிலில் உள்ள சிவன் சந்நிதி உள்ளிட்ட சிவன் கோயில்களில் 4 கால பூஜைகள் நடைபெற்றன. திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வர், ருத்ரகோட்டீஸ்வரர் தீர்த்தகிரீஸ்வரர், பக்தவச்சலேஸ்வரர் ஆகிய சிவன் கோயிலில்களில் 4 கால பூஜைகள் நடைபெற்றன. 
செங்கல்பட்டை அடுத்த அனுமந்தபுரம் அகோர வீரபத்திரசுவாமி கோயிலில் மகாசிவராத்திரி 4 கால சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 
மாமல்லபுரம் மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரர் கோயில் வல்லம் வேதாந்தேஸ்வரர் கோயில், புலிப்பாக்கம் வியாகர புரீஸ்வரர் கோயில், திருவடிச்சூலம் தேனுபுரீஸ்வரர் கோயில், பாலூர் ஸ்ரீபிரமாம்பிகை சமேத ஸ்ரீபதங்கீஸ்வரர் கோயில் வில்லியம்பாக்கத்தில்உள்ள ஸ்ரீ தொக்கீஸ்வரர் கோயில், ஆத்தூர் முத்தீஸ்வரர்கோயில், ஒழலூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர்கோயில், திருப்போரூர் கைலாசநாதர்கோயில், செம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஜம்பூகேஸ்வரர் கோயில், சாலவாக்கம் ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர்கோயில்உள்ளிட்ட கோயில்களில் மகாசிவராத்திரி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 
வில்லிவாக்கம் 
அகத்தீஸ்வரர் கோயிலில்...
சென்னை, வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
வில்லிவாக்கத்தில் பழைமையான அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சிவராத்திரி விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. 
இதனிடையே, கோயில் வளாகத்தில் பரத நாட்டியம், சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 
விழாவில், இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் நாராயணன், கோயில் மேலாளர் குகன், தக்கார் அழகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், செங்குன்றம், புழல், மாதவரம், கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com