திருப்பதி ஏழுமலையானை உடுப்பி அட்மார் மடாதிபதி வியாழக்கிழமை வழிபட்டார்.
ஏழுமலையானை வழிபட உடுப்பியில் உள்ள அட்மார் மடத்தைச் சேர்ந்த மடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ விஸ்வபிரிய தீர்த்த சுவாமிகள் வியாழக்கிழமை காலை ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார். கோயில் முன் அவரை வரவேற்று, மரியாதை அளித்த அதிகாரிகள், அவரை தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கோயிலுக்குள் சென்று கொடி மரத்தை வலம் வந்து ஏழுமலையானை அவர் வழிபட்டு திரும்பினார். பின்னர், அவருக்கு ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் பிரசாதம் வழங்கினர்.