கோவிந்த உபாஸகர் பகவான் ஸ்ரீமத் ஸ்வாமி சீதாராம ஸ்வாமிகளின் ஜயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ நிவாஸப் பெருமாள் திருக்கல்யாண மகோத்ஸவம் மற்றும் திருப்பாவாடை வைபவம் பிப்ரவரி 24, 25 ஆகிய இரு தினங்களுக்கு சென்னை தியாகராய நகர் ஜி.என் செட்டி சாலையில் உள்ள ஆனந்தவல்லி கல்யாண மண்டபத்தில் நடைபெறுகின்றது.
பிப்ரவரி 24 சுதர்சன ஹோமம், நமசங்கீர்த்தனம், இலட்சார்ச்சனை, திருவிளக்கு பூஜை, யாகசாலை பூஜை
பிப்ரவரி 25 ஆயுஷ்ய ஹோமம், ஸ்ரீ நிவாஸப்பெருமாள் திருக்கல்யாணம், திருப்பாவாடை, சுவாமிகளின் அருளாசி உரை ஆகியவை நடைபெறுகிறது.
மேலும் தகவல்களுக்கு: ஸ்ரீநிவாஸ நிகேதனம் - 044 - 28174179
- எஸ். வெங்கட்ராமன்