மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிகளில் பிறந்தவர்களுக்கு தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் எளியப் பரிகாரம் ஒன்றை நமக்கு விளக்கியுள்ளார். அது என்னவென்று பார்ப்போம்.
ராசிகளில் முதல் ராசியாகிய மேஷ ராசியும், ஐந்தாம் ராசியான சிம்ம ராசியும், ஒன்பதாம் ராசியான தனுசு ராசியும் நெருப்பு ராசிகளாகும். நெருப்பு என்பது சூரியனை குறிப்பதாகும். இந்த ராசிக்காரர்கள் தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வருவதன் மூலம் வாழ்வில் மிகப் பெரிய மாற்றங்களைச் சந்திக்க முடியும்.
சூரிய நமஸ்காரம் என்பது யோகா அல்ல. சூரியனை தினமும் வணங்குவது. இந்த எளியப் பரிகாரத்தை செய்வதன் மூலம் வாழ்வில் நமக்கு ஏற்படும் தடைகள் அனைத்தையும் எளிதில் எதிர்கொள்ள முடியும்.