திருக்கல்யாண உற்சவம்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாகான்யம் பகுதியிலுள்ள ஸ்ரீகல்யாண சீனிவாச பெருமாள் கோயிலில், பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
திருக்கல்யாண உற்சவம்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாகான்யம் பகுதியிலுள்ள ஸ்ரீகல்யாண சீனிவாச பெருமாள் கோயிலில், பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
 இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளைஸ்ரீஸ்ரீபூஜ்யஸ்ரீமுரளிதர சுவாமிகள் சீடர் பம்பல் பாலாஜி தலைமையிலான விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 வல்லக்கோட்டை முருகன் கோயிலில்... அதுபோல், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் உள்ள வள்ளி தெய்வானைசமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு திங்கள்கிழமை அதிகாலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து சுப்பிரமணிய சுவாமி சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com