நெமிலி பாலாபீடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் திரைப்பட நடிகர் பார்த்திபனுக்கு ஆன்மிக ஜோதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.
அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் உள்ள ஸ்ரீபாலா
பீடத்தில் திங்கள்கிழமை ஆன்மிக சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டுக்கு, பீடாதிபதி எழில்மணி தலைமை வகித்தார். செயலர் முரளீதரன் வரவேற்றார்.
இதில் கலந்துகொண்ட திரைப்பட நடிகர் பார்த்திபனுக்கு, அவரது கிறுக்கல்களை என்ற கவிதைநூலை பாராட்டி ஆன்மிக ஜோதி' எனும் பட்டத்தை பீடாதிபதி எழில்மணி வழங்கினார். மேலும் பாபாஜி எழுதிய ஆன்மிக நூலும், ஆன்மிக இசைக்குறுந்தகடும் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டன. ஸ்ரீபாலாபீட நிர்வாகி மோகன் அன்னைபாலா வழிபாட்டை நடத்தினார்.