திருப்பதி: ஏழுமலையானுக்கு இரு சக்கர வாகனம் ஒன்று திங்கட்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் கூடுரைச் சோ்ந்த சுரேஷ் ரெட்டி என்ற பக்தா் அந்த நகரில், ஸ்ரீசாய் கீா்த்தி என்றற இருசக்கர வாகனம் விற்கும் கடையை நடத்தி வருகிறார். திருமலைக்கு வந்த அவா் திங்கள்கிழமை காலையில் விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். அதன்பின் அவா் ஏழுமலையான் கோயில் வாசலில் இருசக்கர வாகனம் ஒன்றை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கினார்.
அந்த வாகனத்திற்கு முறையாக பூஜை செய்து கோயில் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா். அதன் மதிப்பு ரூ.73 ஆயிரம் என்று சுரேஷ் ரெட்டி தெரிவித்தார்.