சந்திர கிரகணத்தையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஜூலை 27-ம் தேதி கோயில் நடை சாத்தப்படும் எனக் கோயில் இணை ஆணையர் தெரிவித்தார்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஜூலை 27-ம் தேதி இரவு 11.54 முதல் மறுநாள் ஜூலை 28 அதிகாலை 3.49 மணி வரை சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இதனால் அன்று மாலை 5.00 மணிக்கு பர்வதவர்த்தினி அம்மன் தங்கபல்லக்கில் புறப்பாடாகியதும் இரவு 7.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.
ஜூலை 28-ம் தேதி காலை 4.00 மணிக்கு கோயில் நடை திறந்து கிரகண பரிகார பூஜைகள் நடத்தப்படும். இதன் பிறகு வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.