திருக்கோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாள் கோயிலில் இன்று காலை விமரிசையாக மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயிலில் கடந்த 7-ம் தேதி வேத திவ்ய பிரபந்தாதிகள் தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய நாளான இன்று அதிகாலை புண்யாகவாசனம், விஸ்வரூபம், அக்னி
ஆராதனம், கும்ப ஆராதனம் செய்து மகா பூர்ணாஹூதி முடிந்து கடம் புறப்பாடாகி காலை 9.30 மணிக்குள் கிழக்கு ராஜகோபுரம் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக் கோயில் நிர்வாகத்தினர்கள் செய்திருந்தனர்.