திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலில் டிசம்பர் 12-ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு!

திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் டிசம்பர் மாதம் 12-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலில் டிசம்பர் 12-ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு!


திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் டிசம்பர் மாதம் 12-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பஞ்சபூத தலங்களில் நீர்த் தலமாக விளங்கும் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில். இந்தக் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இக்கோயிலில் கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாகக் குடமுழுக்கு நடைபெறாமல் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. 

கடைசியாக கடந்த 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தின் முயற்றியால் வருகிற டிசம்பர் முதல் வாரத்திற்குள் பணிகள் அனைத்தும் முடித்து டிசம்பர் 12-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோயில் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com