ஏழுமலையானை உடுப்பி பண்டாரகேரி மடாதிபதி வழிபட்டார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பண்டாரகேரி மடத்தின் தலைவர் வித்யாசேதீர்ச்ச ஸ்ரீபாதரு சுவாமிகள் தன் சீடர்களுடன் வியாழக்கிழமை காலை திருமலைக்கு வந்தார்.
ஏழுமலையான் கோயில் முன்பு அவருக்கு கோயில் மரியாதை அளித்து வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள் தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரும் சீடர்களும் ஏழுமலையானைத் தரிசித்தனர். அதைத் தொடர்ந்து அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் பிரசாதங்களை வழங்கினர்.