ஆம்பூர் அருகே தேவலாபுரம் கிராமத்தில் உள்ள திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் நடிகர் சந்தானம் வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்தார்.
ஆம்பூர் அருகே தேவலாபுரத்தில் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு இந்தக் கோயில் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயில் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலுக்கு வியாழக்கிழமை வந்த திரைப்பட நடிகர் சந்தானம், அங்கு சாமி தரிசனம் செய்தார்.
கோயில் தர்மகர்த்தா ஈ.வெங்கடேசன், முன்னாள் ஊராட்சித் துணைத் தலைவர் நித்தியானந்தம் மற்றும் கோயில் நிர்வாகிகள் உடனிருந்தனர்.