திருமலையில் மூத்த குடிமக்களுக்கு செவ்வாய்க்கிழமையும், (24-ஆம் தேதி), கைக்குழந்தைகளின் பெற்றோருக்கு புதன்கிழமையும் (25-ஆம் தேதி) இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது.
தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாட்களுக்கு மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டவர்களுக்கு இலவச தரிசனத்தை வழங்கி வருகிறது. அதன்படி வரும் 24-ஆம் தேதி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு இரண்டாயிரம் பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்க உள்ளது.
அதேபோல், வரும் 25ஆம் தேதி காலை 9 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது. இத்தரிசனத்தை முடிப்பவர்கள் 90 நாள்களுக்குப் பின்பே மீண்டும் ஏழுமலையானை இலவசமாகத் தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.
தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.