ஆந்திராவில் பரபரப்பு: பூஜையின் போது லிங்கத்தின் மேல் விழுந்து உயிரிழந்த அர்ச்சகர் 

ஆந்திராவில் உள்ள சிவன் கோயில் ஒன்றில் பூஜையின் போது அர்ச்சகர் சிவலிங்கத்தின்
ஆந்திராவில் பரபரப்பு: பூஜையின் போது லிங்கத்தின் மேல் விழுந்து உயிரிழந்த அர்ச்சகர் 

ஆந்திராவில் உள்ள சிவன் கோயில் ஒன்றில் பூஜையின் போது அர்ச்சகர் சிவலிங்கத்தின் மீது விழுந்து உயிரிழந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. 

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தில் உள்ள சோமேஸ்வரர் ஜனார்த்தனன் கோயிலில் தலைமை அர்ச்சகராகப் பணிபுரிந்து வந்தவர் வெங்கட ராமாராவ். 

இவர் வழக்கம் போல் நேற்று காலை கோயிலைத் திறந்து சிவ லிங்கத்திற்குப் பூஜை செய்துள்ளார். அப்போது திடீரென தடுமாறி சிவலிங்கத்தின் மீது விழுந்துள்ளார். 

பதறிப்போன சக அர்ச்சகர்கள் அவரை தூக்கி நிறுத்த முயற்சித்த போதும், மீண்டும் லிங்கத்தின் மீது விழுந்துள்ளார். இதையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அர்ச்சகர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் கோயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானதால் சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவி வருகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com