திருப்பதி மலையப்பசாமிக்கு ஜூன் 26-ல் ஜேஷ்டாபிஷேகம் தொடக்கம் 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் 24-ம் தேதி முதல் ஜூன் 26 வரை ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுகிறது. 
திருப்பதி மலையப்பசாமிக்கு ஜூன் 26-ல் ஜேஷ்டாபிஷேகம் தொடக்கம் 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் 24-ம் தேதி முதல் ஜூன் 26 வரை ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுகிறது. 

திருமலை திருப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு ஜேஷ்டா மாத்தில் ஜேஷ்டா நட்சத்திரம் முடிவதற்குள் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு வருகிற 24-ம் தேதியில் இருந்து 26-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. 

ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்பசாமி மீது அணிவிக்கப்பட்டு இருக்கும் தங்க கவசம் 19-ம் தேதி அகற்றப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து 24-ம் தேதி உற்சவருக்கு ஹோமம், அபிஷேகம் ஆகியவை நடத்தப்படுகிறது. 

25-ம் தேதி உற்சவரான மலையப்பசாமிக்கு முத்துக்கவசமும், 26-ம் தேதி தங்கக் கவசமும் அணிவிக்கப்பட்டு நான்கு மாடவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com