திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் 24-ம் தேதி முதல் ஜூன் 26 வரை ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுகிறது.
திருமலை திருப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு ஜேஷ்டா மாத்தில் ஜேஷ்டா நட்சத்திரம் முடிவதற்குள் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு வருகிற 24-ம் தேதியில் இருந்து 26-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்பசாமி மீது அணிவிக்கப்பட்டு இருக்கும் தங்க கவசம் 19-ம் தேதி அகற்றப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து 24-ம் தேதி உற்சவருக்கு ஹோமம், அபிஷேகம் ஆகியவை நடத்தப்படுகிறது.
25-ம் தேதி உற்சவரான மலையப்பசாமிக்கு முத்துக்கவசமும், 26-ம் தேதி தங்கக் கவசமும் அணிவிக்கப்பட்டு நான்கு மாடவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.