திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா நேற்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது.
உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைக்குப் பின்னர் சுவாமி கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதைத்தொடர்ந்து வரும் 26-ம் தேதி ஊஞ்சல் விழாவும், ஜூன் 27-ல் உச்சிகால பூஜையின்போது மூலவர்கள் பரிவார மூர்த்திகளுக்குப் பூஜை நடைபெறும். அன்றிரவு யானை மண்டபத்தில் உற்சவர் எழுந்தருளி, கோயில் யானை தெய்வானைக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்படும்.