அருணாசலேஸ்வரர் கோயிலில் அணையா தீபங்கள் ஏற்றம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை 3 அணையா தீபங்கள் ஏற்றப்பட்டன.
அருணாசலேஸ்வரர் கோயிலில் அணையா தீபங்கள் ஏற்றம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை 3 அணையா தீபங்கள் ஏற்றப்பட்டன.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் அணையா தீபங்களை ஏற்ற கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. தகவலறிந்த சினிமா நடிகர் ஹம்சவர்தன் 6 அணையா தீபங்களைக் காணிக்கையாக அளித்தார். இதில், 3 அணையா தீபங்கள் கோயிலின் 3-ஆம் பிரகாரத்தில் வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டன.
அணையா தீபங்களைச் சுற்றிலும் காற்று, மழையால் பாதிப்பு ஏற்படாதவாறு கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் தொடர்ந்து எரியும் இந்த தீபங்களுக்குத் தேவையான நெய் காணிக்கையை பக்தர்கள் செலுத்துவதற்கான வசதியும் தீபப் பெட்டியிலேயே செய்யப்பட்டுள்ளது.
மேலும் 3 தீபங்கள்: திருவண்ணாமலையை அடுத்த அடி அண்ணாமலையில் உள்ள ஸ்ரீஆதி அருணாசலேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை ஸ்ரீதுர்க்கையம்மன் கோயில், திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி ஸ்ரீமுருகப்பெருமான் கோயில் ஆகிய 3 இடங்களில் மீதமுள்ள 3 அணையா தீபங்கள் ஏற்றப்படும் என்று கோயில் இணை ஆணையர் ஞானசேகர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com