மார்ச் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக அமையுமாம்!

மாதங்களில் மூன்றாவதாக விளங்கும் மார்ச் மாதத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி...
மார்ச் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக அமையுமாம்!

மாதங்களில் மூன்றாவதாக விளங்கும் மார்ச் மாதத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பலனடைவோம். 

மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:
சுகஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், குரு(அ)  - பாக்கியஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் கேது  - லாபஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
இந்த மாதம் 3ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.34க்கு விரைய ஸ்தானத்திற்கு சுக்கிரன் மாறுகிறார்.
இந்த மாதம் 10ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.30க்கு பாக்கிய ஸ்தானத்திற்கு செவ்வாய் மாறுகிறார்.
இந்த மாதம் 14ம் தேதி - புதன்கிழமை அன்று இரவு 11.12க்கு விரைய ஸ்தானத்திற்கு சூரியன் மாறுகிறார்.
இந்த மாதம் 27ம் தேதி - புதன்கிழமை அன்று மாலை 3.24க்கு சுக்கிரன் ராசிக்கு வருகிறார். 

தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடும் மேஷ ராசியினரே இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் விரைய ஸ்தானத்தில் மறைந்திருந்தாலும் அவரின் பார்வை மூலம் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். குருவின் பார்வை ராசி மீது விழுவதால் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். அஷ்டமத்தி சனி இருப்பதால் சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது.  திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.

தொழில் ஸ்தானத்தை அதன் அதிபதி சனி பாக்கிறார். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்ப ஸ்தானாதிபதி சுக்கிரனுடன் ராசிநாதன் செவ்வாய் சம்பந்தம் பெறுகிறார். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள்  நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். 

அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.  

மாணவர்களுக்கு  கல்வியில் மேன்மை அடைய கூடுதல்  கவனத்துடன்  படிப்பது அவசியம்.

பரிகாரம்: செவ்வாய்கிழமையில் நவகிரகத்தில் செவ்வாயை அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வெள்ளி

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:
தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், குரு(அ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் கேது -  தொழில் ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
இந்த மாதம் 3ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.34க்கு லாப ஸ்தானத்திற்கு சுக்கிரன் மாறுகிறார்.
இந்த மாதம் 10ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.30க்கு அஷ்டம ஸ்தானத்திற்கு செவ்வாய் மாறுகிறார்.
இந்த மாதம் 14ம் தேதி - புதன்கிழமை அன்று இரவு 11.12க்கு லாப ஸ்தானத்திற்கு சூரியன் மாறுகிறார்.
இந்த மாதம் 27ம் தேதி - புதன்கிழமை அன்று மாலை 3.24க்கு விரைய ஸ்தானத்திற்கு சுக்ரன் மாறுகிறார்.

பிரச்சனைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகுமுறையால் வெற்றி காணும் ரிஷப ராசியினரே இந்த காலகட்டத்தில் ராசிநாதன் லாபஸ்தானத்தில் உச்ச நிலையில் அமர்ந்திருக்கிறார். அவருடன் சப்தம விரையாதிபதி செவ்வாயும் இணைந்திருப்பதன் மூலம் நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின்  நட்பு கிடைக்கும்.

தொழில் ஸ்தானத்தில் சுகாதிபதி சூரியன் - தனபஞ்சமாதிபதி புதனுடன் இணைந்து அலங்கரிக்க சனி ராசியைப் பார்க்கிறார். லாபாதிபதி குரு தொழில் ஸ்தானத்தைப் பார்க்கிறார். தொழில் வியாபாரம் தொடர்பான  விஷயங்கள் சாதகமாக  நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

இந்த காலகட்டத்தின் ஆரம்பத்தில் குடும்ப ஸ்தானாதிபதி புதன் சுகஸ்தானத்தைப் பார்க்கிறார். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள்.

பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். மனதில்  ஏதாவது கவலை இருந்து வரும். 

கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். 

அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.  

மாணவர்களுக்கு  வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறைய கூடும். நன்கு படிப்பது நல்லது. பெற்றோர் ஆதரவு பெருகும். வெளிநாடு சம்பந்தமான படிப்புகளுக்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.

பரிகாரம்:  வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில்  சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி

{pagination-pagination}
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், குரு(அ) - சப்தம ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், ராசிநாதன் புதன், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
இந்த மாதம் 3ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.34க்கு தொழில் ஸ்தானத்திற்கு சுக்கிரன் மாறுகிறார்.
இந்த மாதம் 10ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.30க்கு சப்தம ஸ்தானத்திற்கு செவ்வாய் மாறுகிறார்.
இந்த மாதம் 14ம் தேதி - புதன்கிழமை அன்று இரவு 11.12க்கு தொழில் ஸ்தானத்திற்கு சூரியன் மாறுகிறார்.
இந்த மாதம் 27ம் தேதி - புதன்கிழமை அன்று மாலை 3.24க்கு லாப ஸ்தானத்திற்கு சுக்ரன் மாறுகிறார்.

கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திறமை உடைய  மிதுன ராசியினரே இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் பாக்கியஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது உங்களுக்கு சாதகமான அமைப்பைக் காட்டுகிறது. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பஞ்சம விரையாதிபதி சுக்கிரன் தனஸ்தானத்தைப் பார்ப்பதன் மூலம் பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். மாத இறுதியில் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

தொழில் ஸ்தானாதிபதி குரு ராசிக்கு ஐந்தாமிடத்தில் மறைந்திருந்தாலும் அவரின் சார பலத்தால் தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.

தைரிய ஸ்தானத்தை ராசிநாதன் புதன் பார்க்கிறார். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.

பெண்களுக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.

அர்சியல்வாதிகள் கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். உங்கள் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். கட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்பு நீங்கும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து உங்கள் மனதில் இடம்பிடிப்பார்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானம் உயர வழி பிறக்கும். விமர்சனக்களையும் தாண்டி முன்னேறுவார்கள். வேலைப்பளு காரணமாக வெளியில் தங்க நேரலாம்.

மாணவர்களுக்கு பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன்

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:
ராசியில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு(அ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - சப்தம ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
இந்த மாதம் 3ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.34க்கு பாக்கிய ஸ்தானத்திற்கு சுக்கிரன் மாறுகிறார்.
இந்த மாதம் 10ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.30க்கு ரண ருண ரோக ஸ்தானத்திற்கு செவ்வாய் மாறுகிறார்.
இந்த மாதம் 14ம் தேதி - புதன்கிழமை அன்று இரவு 11.12க்கு பாக்கிய ஸ்தானத்திற்கு சூரியன் மாறுகிறார்.
இந்த மாதம் 27ம் தேதி - புதன்கிழமை அன்று மாலை 3.24க்கு தொழில் ஸ்தானத்திற்கு சுக்ரன் மாறுகிறார்.

அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியம் உடைய கடக ராசியினரே இந்த காலகட்டத்தில் தனஸ்தானத்தை தனாதிபதி சூரியன் - புதன் ஆகியோர் பார்க்கிறார்கள். எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.

தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். வாக்கு ஸ்தானத்தை சனி பார்க்க வாக்கு ஸ்தானத்தில் ராகு அமர்ந்திருக்கிறார். தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.  புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள்  செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

குடும்பாதிபதி தனது ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம்  நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். 

பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை வெளியிட வேண்டாம். தொகுதியில் மதிப்பு கூடும். கோஷ்டிப் பூசலையும் தாண்டி சாதிப்பீர்கள்.

கலைத்துறையினர் யதார்த்தமான படைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

மாணவர்களுக்கு  புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த  தொய்வு நீங்கும்.

பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் செவ்வாய், குரு(அ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
இந்த மாதம் 3ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.34க்கு அஷ்டம ஸ்தானத்திற்கு சுக்கிரன் மாறுகிறார்.
இந்த மாதம் 10ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.30க்கு பஞ்சம ஸ்தானத்திற்கு செவ்வாய் மாறுகிறார்.
இந்த மாதம் 14ம் தேதி - புதன்கிழமை அன்று இரவு 11.12க்கு அஷ்டம ஸ்தானத்திற்கு சூரியன் மாறுகிறார்.
இந்த மாதம் 27ம் தேதி - புதன்கிழமை அன்று மாலை 3.24க்கு பாக்கிய ஸ்தானத்திற்கு சுக்ரன் மாறுகிறார்.

உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்யும் குணமுடைய சிம்ம ராசியினரே இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சூரியன் ஏழாமிடத்தில் புதன் கேதுவுடன் இணைந்து இருக்கிறார். ராசிநாதன் இருக்கும் இடம் அவருக்கு நட்பு வீடாகவும் சார ரீதியிலும் அனுகூலமாக இருக்கிறார். ராசியைப் பார்க்கிறார். எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். தனலாபத்தை தருவார். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.

தொழில் ஸ்தானத்தை சனி பார்க்கிறார். தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் உச்சமாக இருக்கிறார். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம்.

குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். 

பெண்களுக்கு  உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம்.

அரசியல்வாதிகள் சகாக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கட்சித் தலைமையின் ஆதரவு கிட்டும். கட்சி மேல்மட்டத்தால் அலைக்கழிக்கப்படுவர்.

கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். நல்ல வரவேற்பு கிடைக்கும். உங்களது கலைத்திறன் வளரும். 

மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.

பரிகாரம்:  தினமும் சூரிய நமஸ்காரம் செய்து சிவனை வணங்க பிரச்சனைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன்

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:
தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய், குரு(அ) - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
இந்த மாதம் 3ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.34க்கு சப்தம் ஸ்தானத்திற்கு சுக்கிரன் மாறுகிறார்.
இந்த மாதம் 10ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.30க்கு சுக ஸ்தானத்திற்கு செவ்வாய் மாறுகிறார்.
இந்த மாதம் 14ம் தேதி - புதன்கிழமை அன்று இரவு 11.12க்கு சப்தம் ஸ்தானத்திற்கு சூரியன் மாறுகிறார்.
இந்த மாதம் 27ம் தேதி - புதன்கிழமை அன்று மாலை 3.24க்கு அஷ்டம ஸ்தானத்திற்கு சுக்ரன் மாறுகிறார்.

எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்து முடிக்கும் கன்னி ராசியினரே இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் ஆறாமிடத்தில் மறைந்திருந்தாலும் நட்பு வீட்டில் சஞ்சரிக்கிறார். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். ராசிநாதனின் சார பலத்தின் மூலம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும்.   விருப்பங்கள்  கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.  மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும்.

தொழில் ஸ்தானத்திற்கு சூரியன் திரிகோணம் பெற்றிருக்கிறார். தொழில் ஸ்தானத்தை குரு பார்க்கிறார். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.

குடும்ப ஸ்தானத்தில் குரு இருக்கிறார். செவ்வாய் குடும்ப ஸ்தானத்தைப் பார்க்கிறார். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

பெண்களுக்கு நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும்.  எதிர்பார்த்த தகவல்கள் வரும். 

அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும் கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப் படுவீர்கள்.

கலைத்துறையினர் மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவர். பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்பு தேடிவரும். சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம்.

மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை.  பாடங்கள் எளிமையாக தோன்றும். 

பரிகாரம்:  கிருஷ்ண பரமாத்மாவை வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், குரு(அ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன்  - தொழில் ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
இந்த மாதம் 3ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.34க்கு ரண ருண ரோக ஸ்தானத்திற்கு சுக்கிரன் மாறுகிறார்.
இந்த மாதம் 10ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.30க்கு தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு செவ்வாய் மாறுகிறார்.
இந்த மாதம் 14ம் தேதி - புதன்கிழமை அன்று இரவு 11.12க்கு ரண ருண ரோக ஸ்தானத்திற்கு சூரியன் மாறுகிறார்.
இந்த மாதம் 27ம் தேதி - புதன்கிழமை அன்று மாலை 3.24க்கு சப்தம் ஸ்தானத்திற்கு சுக்ரன் மாறுகிறார்.

துணிச்சலாக காரியங்களில் ஈடுபடும் அதே நேரத்தில் நியாயமாகவும், நேர்மையாகவும அதனை செய்து முடிக்கும் குணமுடைய துலா ராசியினரே இந்த காலகட்டத்தில் ராசியில் தைரிய ரோகாதிபதி குரு அமர ராசிநாதன் ஆறாமிடத்தில் உச்சம் பெறுகிறார். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். லாபஸ்தானத்தில் இருக்கும் ராகுவால் பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும் படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும்.

தொழில் ஸ்தானத்தை சூரியன் - ராசிநாதன் புதன் - சனி ஆகியோர் பார்க்கிறார்கள். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

குடும்ப ஸ்தானத்தில் சனி இருந்தாலும் குடும்பாதிபதி செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும் படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  

பெண்களுக்கு மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும்.

அரசியல்வாதிகள் கட்சிப் பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. எதிர்க்கட்சியினரின் உதவி கிடைக்கும். கட்சித் தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்பை ஒப்படைக்கும்.

கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவர். உங்களை உதாசீனப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்களை கற்றுத் தெளிவீர்கள்.


மாணவர்களுக்கு கல்வியில்  முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். 


பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க  கடன் பிரச்சனை தீரும். மன நிம்மதி கிடைக்கும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:
ராசியில் செவ்வாய், குரு(அ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
இந்த மாதம் 3ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.34க்கு பஞ்சம ஸ்தானத்திற்கு சுக்கிரன் மாறுகிறார்.
இந்த மாதம் 10ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.30க்கு தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு செவ்வாய் மாறுகிறார்.
இந்த மாதம் 14ம் தேதி - புதன்கிழமை அன்று இரவு 11.12க்கு பஞ்சம ஸ்தானத்திற்கு சூரியன் மாறுகிறார்.
இந்த மாதம் 27ம் தேதி - புதன்கிழமை அன்று மாலை 3.24க்கு ரண ருண ரோக ஸ்தானத்திற்கு சுக்ரன் மாறுகிறார்.

எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கும் விருச்சிக ராசியினரே இந்த காலகட்டத்தில் ஐந்தாமிடத்தில் நட்பு வீட்டில் அமர்ந்திருக்கிறார். ஏழரை சனியின் பிடியில் இருந்தாலும் மற்ற கிரகங்கள் உங்களுக்கு அனுகூலமான பலன்களை அள்ளித் தர காத்திருக்கிருக்கிறார்கள். வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். சனி ஜென்ம  சஞ்சாரத்தால் காரிய தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். ஆனாலும் சனியின் சார சஞ்சாரத்தால் மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.

தொழில் ஸ்தானத்தில் ராகு அமர அந்த ஸ்தானத்தை தொழில் ஸ்தானாதிபதி சூரியன் - புதன் - சனி ஆகியோர் பார்க்கிறார்கள். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது.

குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.     

பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.  

அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம். கட்சித் தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.

கலைத்துறையினர் புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பர். படைப்புகளை வெளியிட சில போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.

மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள். 

பரிகாரம்: திருமுருகாற்றுபடையை பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும். குடும்ப கஷ்டம் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:
ராசியில் சனி - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - விரைய ஸ்தானத்தில் செவ்வாய், குரு(அ) - சுக ஸ்தானத்தில் புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
இந்த மாதம் 3ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.34க்கு சுக ஸ்தானத்திற்கு சுக்கிரன் மாறுகிறார்.
இந்த மாதம் 10ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.30க்கு ராசிக்கு செவ்வாய் மாறுகிறார். 
இந்த மாதம் 14ம் தேதி - புதன்கிழமை அன்று இரவு 11.12க்கு சுக ஸ்தானத்திற்கு சூரியன் மாறுகிறார்.
இந்த மாதம் 27ம் தேதி - புதன்கிழமை அன்று மாலை 3.24க்கு பஞ்சம ஸ்தானத்திற்கு சுக்ரன் மாறுகிறார்.

எந்த நேரத்திலும் தகுதி குறையாமல் செயல்படும் தனுசு ராசியினரே நீங்கள் உயர்ந்த எண்ணங்களை உடையவர்கள். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் குரு லாபஸ்தானத்தில் அதிசார கதியில் இருக்க பாக்கியாதிபதி சூரியன் தன்னுடைய ஸ்தானத்தைப் பார்க்கிறார். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். பஞ்சம விரையாதிபதி செவ்வாயின் சுகஸ்தான சஞ்சாரம் சுப பலன்களை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனாலும் ஏழரை சனியின் முதல் காலகட்டத்தில் இருப்பதால் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

தொழில் ஸ்தானாதிபதி புதன் தைரிய ஸ்தானத்தில் இருப்பது நல்ல அம்சம். தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும்.

குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்.  மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் காட்ட வேண்டாம். தொகுதி மக்களிடம் நெருங்கி பழகுவது அவசியம். 

கலைத்துறையினருக்கு வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அயராத உழைப்பால் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். 

மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.


பரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன் - வெள்ளி

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:
ராசியில் கேது - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு(அ) - விரைய ஸ்தானத்தில் சனி - தைரிய வீர்ய ஸ்தானத்தில் புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
இந்த மாதம் 3ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.34க்கு தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு சுக்கிரன் மாறுகிறார்.
இந்த மாதம் 10ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.30க்கு விரைய ஸ்தானத்திற்கு செவ்வாய் மாறுகிறார்.
இந்த மாதம் 14ம் தேதி - புதன்கிழமை அன்று இரவு 11.12க்கு தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு சூரியன் மாறுகிறார்.
இந்த மாதம் 27ம் தேதி - புதன்கிழமை அன்று மாலை 3.24க்கு சுக ஸ்தானத்திற்கு சுக்ரன் மாறுகிறார்.

எத்தனை தடைவந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் பின்வாங்காத மகர ராசியினரே இந்த காலகட்டத்தில் ராசிநாதன் லாபஸ்தானத்தில் இருப்பதால் நன்மை வரும். எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். சுக்கிரன் சஞ்சாரம் அனுகூலமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும்.  நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். 

தொழில் ஸ்தானத்தை சுக லாபாதிபதியான செவ்வாய் பார்க்கிறார். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும்.

குடும்ப ஸ்தானத்தில் சூரியன் - புதன் - கேது இருக்க, அந்த ஸ்தானத்தை குரு பார்க்கிறார். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும்.

பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். வீண், வறட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளை கரைத்துக்கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமளவுக்குப் பிரபலமாவார்கள். நல்ல வாய்ப்புகள் வரும். உங்கல் முன்னேற்றத்திற்கு பாதை வகுக்கும் காலமாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். 

பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வெள்ளி

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

கிரகநிலை:
ராசியில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், குரு(அ) - லாப ஸ்தானத்தில் சனி - விரைய ஸ்தானத்தில் கேது - தன வாக்கு ஸ்தானத்தில் புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
இந்த மாதம் 3ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.34க்கு தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு சுக்கிரன் மாறுகிறார்.
இந்த மாதம் 10ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.30க்கு லாப ஸ்தானத்திற்கு செவ்வாய் மாறுகிறார்.
இந்த மாதம் 14ம் தேதி - புதன்கிழமை அன்று இரவு 11.12க்கு தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு சூரியன் மாறுகிறார்.
இந்த மாதம் 27ம் தேதி - புதன்கிழமை அன்று மாலை 3.24க்கு தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு சுக்ரன் மாறுகிறார்.

எந்த காரியம் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உடைய கும்பராசியினரே நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர். இந்த காலகட்டத்தில் ராசியில் சூரியன் - புதன் - கேது சஞ்சாரம் இருந்தாலும் குரு ராசியைப் பார்ப்பதன் மூலம் நல்ல பலன்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது. வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். ராசியிலுள்ள கேதுவின் சஞ்சாரம் எவ்வளவு திறமையுடன்  செயல்பட்டாலும் காரிய தடங்கலை ஏற்படுத்தும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். 

தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் சனி இருப்பது சிறப்பு. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

குடும்ப ஸ்தானாதிபதி குரு ராசியைப் பார்க்கிறார். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு - மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.

பெண்களுக்கு மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது. 

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரிய தடைகளை போக்கும். நன்மை கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன்

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:
ராசியில் புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு(அ) - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
இந்த மாதம் 3ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.34க்கு ராசிக்கு சுக்கிரன் மாறுகிறார்.
இந்த மாதம் 10ம் தேதி - சனிக்கிழமை அன்று பகல் 12.30க்கு தொழில் ஸ்தானத்திற்கு செவ்வாய் மாறுகிறார்.
இந்த மாதம் 14ம் தேதி - புதன்கிழமை அன்று இரவு 11.12க்கு ராசிக்கு சூரியன் மாறுகிறார்.
இந்த மாதம் 27ம் தேதி - புதன்கிழமை அன்று மாலை 3.24க்கு தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு சுக்ரன் மாறுகிறார்.

குடும்பத்தில் அக்கறை காட்டும் மீன ராசியினரே நீங்கள் கவலை, பயம் இல்லாமல் செயல்படக்கூடியவர். எல்லா விஷயத்திற்கும் மனசாட்சியை நம்புபவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் அதிசார நிலையில் அஷ்டம ஸ்தானத்தில்  மறைந்திருக்கிறார். ஆனால் மற்ற கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலனை அள்ளித்தரும் நிலையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். ராசிநாதனின் சஞ்சாரம் எல்லாவற்றிலும் இருந்து வந்த மனகவலையை நீக்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை. 

தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும்.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்ப ஸ்தானத்தை ராசிநாதன் குரு பார்ப்பது நன்மைக்கு வழி வகுக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது.  பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை.

அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். எதிர்க்கட்சியினர் உதவுவார்கள். மறைமுக போட்டிகள் இருக்கும். தொண்டர்களின் உதவியுடன் செயலாற்றுவீர்கள்.

கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் உழைப்பினை தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றியை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ளலாம்.

மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

பரிகாரம்: நவகிரகத்தில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வியாழன் - வெள்ளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com