திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான பத்மாவதி கலை கல்லூரியில் உலக மகளிர் தின விழா வியாழக்கிழமை கொண்டாப்பட்டது.
விழாவையொட்டி, மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். அதன்பின், ஓய்வு பெற உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தேவஸ்தானம் சார்பில், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பின்னர், உயர் பதவியில் உள்ள பெண்கள் பலர் பெண்களின் சுயமரியாதை, உயர்வு குறித்துப் பேசினர். இதில் தேவஸ்தான அதிகாரிகள், தேவஸ்தானத்தில் பணிபுரியும் பெண்கள் கலந்து கொண்டனர்.