சிவகங்கை அருகே கொல்லங்குடி காளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 23-ல் தொடங்கி ஏப்ரல் 3 வரை நடைபெறுகிறது.
கொல்லங்குடி அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அந்தவகையில், இந்தாண்டு மார்ச் 23-ல் கொடியேற்றத்துடன், காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடக்கின்றன.
இதையொட்டி, தினமும் ஒரு வாகனத்தில் அன்னை வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏப்ரல் 1-ம் தேதி தேரோட்டமும், ஏப்ரல் 2-ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.