புதுக்கோட்டை அருகே திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழாவையொட்டி, தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் பிப்ரவரி மாதம் 25-ம் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. மார்ச் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிப்பெருந்திருவிழா தொடங்கியது.
இதையடுத்து நேற்று மாசித்திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் அக்கினி குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.