பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் பங்குனி மாத பூஜைக்காக 14-ம் தேதி (நாளை) நடை திறக்கப்படுகிறது. 
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் பங்குனி மாத பூஜைக்காக 14-ம் தேதி (நாளை) நடை திறக்கப்படுகிறது. 

பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தினமும் அதிகாலை 3.30 மணி முதல் 11 மணி வரை நெய்யபிஷேகமும் நடைபெறும். 

19-ம் தேதி இரவு பங்குனி மாத பூஜைகள் நிறைவடைந்து அன்றிரவு 10 மணிக்குக் கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் பங்குனி உத்திர விழாவுக்காக 20-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும். 21-ம் தேதி காலை 10 மணியளவில் தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் தலைமையில் கொடியேற்றம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com