திருமலையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருமலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 18) தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.
இதற்காக காலையில் நடைபெற்ற சேவைகள் அனைத்தும் ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்பட்டன.
பின்னர், காலை 6 மணி முதல் காலை 11 மணி வரை ஏழுமலையான் கோயில் வெளிவாசல் முதல் கருவறை வரை பரிமள சுகந்த திரவியத்தை பயன்படுத்தி சுத்தம் செய்யப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் பங்கேற்றனர். கோயில் முழுவதும் சுத்தம் செய்தபின் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.