ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்ச் 30-ல் ரெங்கமன்னார் திருக்கல்யாண மகோத்சவம் 

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்ச் 30-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. 
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்ச் 30-ல் ரெங்கமன்னார் திருக்கல்யாண மகோத்சவம் 

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்ச் 30-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. 

திருக்கல்யாண மகோத்சவத்தை முன்னிட்டு மார்ச் 22-ம் தேதி கொடியேற்றப்படுகிறது. மார்ச் 23 முதல் 29 வரை தாயார் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 

30-ம் தேதி காலையில் 7 மணிக்கு ஸ்ரீரெங்கமன்னார்-ஸ்ரீஆண்டாள் திருத்தேர் எழுந்தருளல் நடைபெறும். அன்று மாலை 6,00 மணிக்கு மேல் ஸ்ரீஆண்டாள்-ஸ்ரீரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறும்.

31-ம் தேதி ஊஞ்சல் சேவையும், ஏப்ரல் 1-ம் தேதி மாலை ஆஸ்தானம், 3-ம் புஷ்ப யாகமும் நடைபெறும். 

விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com