மேனாம்பேடு அன்னபூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயத்தில் 18-ம் ஆண்டு திருக்கல்யாண மகோத்ஸவம் 

அம்பத்தூர், மேனாம்பேட்டில் உள்ள அருள்மிகு அன்னபூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயத்தில் 18-ம் ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாணம் மார்ச் 30-ம் தேதி நிகழ உள்ளது. 
மேனாம்பேடு அன்னபூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயத்தில் 18-ம் ஆண்டு திருக்கல்யாண மகோத்ஸவம் 

அம்பத்தூர், மேனாம்பேட்டில் உள்ள அருள்மிகு அன்னபூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயத்தில் 18-ம் ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாணம் மார்ச் 30-ம் தேதி நிகழ உள்ளது. 

தொண்டை நாட்டின் 32 பாடல் பெற்ற சிவ ஸ்தலத்தில் 51வது ஊர் என்று அழைக்கப்படும் அம்பத்தூர் மாநகரத்தில் இரண்டு பாடல் பெற்ற சிவ ஸ்தலத்தில் (திருமுல்லைவயில், திருவல்லிதாயம்) ஆலயத்திற்கு நடுநாயகமாகவும், திருமுல்லைவாயில் ஆலயத்திற்கு ஈசான்ய லிங்கமாகவும் கருதப்படுகிறது. 

பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த சிவாலயத்தில் நிகழும் ஹேவிளம்பி வருடம் பங்குனி மாதம் 16-ம் நாள் (30.03.18) வெள்ளிக்கிழமை, சதுர்த்தசி பௌர்ணமி திதி, உத்திர நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் மாலை 6.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள்ளாக ஆத்மநாத ஈஸ்வரர்-அன்னபூரணி அம்பாளுக்கும், சிவசுப்ரமண்யருக்கும்-வள்ளி தேவசேனா அம்பாள்களுக்கும், ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும்-மனோன்மணி அம்பாளுக்கும் பங்குனி உத்திர திருக்கல்யாணம் கோவர்த்தன நேசப்பெருமாள் எழுந்தருளி அருள்மிகு ஸ்ரீசுந்தர விநாயகர் ஆலயத்தில் நடைபெறவிருப்பதால் அனைத்து ஆன்மிக பக்தர்களும் கலந்து கொண்டு கண்டுகளித்து எல்லாம் வல்ல அனைத்து சுவாமிகளின் அருள்பெற வேண்டுகிறோம். 

விருப்பம் உள்ளவர்கள் ரூ.501, ரூ.1001, ரூ.3001 என நன்கொடை அளித்து இறைவன் அருளுக்குப் பாத்திரராகும்படி கேட்டுக்கொள்கின்றோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com