திருப்பாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் தொடக்கம் 

பொன்னேரி அருகே திருப்பாலைவனம் கிராமத்தில் உள்ள, லோகாம்பிகை உடனுறை திருப்பாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை விநாயகர் உற்சவத்துடன் தொடங்கியது. 
திருப்பாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் தொடக்கம் 

பொன்னேரி அருகே திருப்பாலைவனம் கிராமத்தில் உள்ள, லோகாம்பிகை உடனுறை திருப்பாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை விநாயகர் உற்சவத்துடன் தொடங்கியது. 
பொன்னேரி-பழவேற்காடு சாலையில் உள்ள திருப்பாலைவனம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த திருப்பாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 
இதையொட்டி நடைபெற்ற விநாயகர் உற்சவத்தைத் தொடர்ந்து, மார்ச் 21-ஆம் தேதி கொடியேற்றமும், 22-ஆம் தேதி சூரிய பிரபை, சந்திர பிரபையும், 23-ஆம் தேதி அதிகார நந்தி, 24-ஆம் தேதி பஞ்சமூர்த்தி-ரிஷப வாகனம், 25-இல் நாக வாகனம், 26-இல் யானை வாகனம் ஆகிய சேவைகள் நடைபெறுகின்றன. 27-ஆம் தேதி திருத்தேர் விழாவும், 28-ஆம் தேதி பார்வேட்டை, குதிரை வாகனமும், 29-இல் அம்பலவாணர் திருக்காட்சியும், 30-ஆம் தேதி தீர்த்தவாரி, திருக்கல்யாணம், கொடியிறக்கம், தெப்பல் உற்சவம், பஞ்ச மூர்த்தி வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. 31-ஆம் தேதி பந்தம் பரி, ஏப்ரல் 1-இல் உற்சவ சாந்தியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் திருப்பாலைவனம், அதனைச் சுற்றுவட்டார கிராம மக்கள் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com