பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வரும் 22-ம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு வைகாசி விசாகத் திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் சிறப்பு அம்சமாக 27-ல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
28-ம் தேதி வைகாசி விசாகத்தன்று மலைக்கோயில் சன்னதியில் அதிகாலை 4.00 மணிஙககு திறக்கப்படும். பெரியநாயகியம்மன் கோயில் நான்கு ரத வீதிகளில் மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.