பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் 17-ம் தேதி அனுக்ஞை, காப்புக்கட்டுதல் நடந்தது. தொடர்ந்து நேற்று கொடிமரத்தில் கருடக்கொடி ஏற்றப்பட்டது. இரவு பெருமாள் அன்னவாகனத்தில் வீதியுலா வந்தார்.
மே 24-ல் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாளுக்குத் திருக்கல்யாணமும், இரவு பூப்பல்லக்கில் வீதியுலா நடைபெற உள்ளது. மே 26-ல் தேரோட்டமும் மறுநாள் தீர்த்தவாரி, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்.