பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
பெரியநாயகியம்மன் கோயிலில் நேற்று காலை முத்துக் குமாரசுவாமி வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு கும்பகலச அபிஷேக பூஜையுடன் கொடியேற்றம் நடந்நது. மே 27-ம் தேதி இரவு முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
மே 28-ல் வைகாசி விசாகத்தன்று மலைக்கோயில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, அன்று மாலை பெரியநாயகியம்மன் கோயில் ரதவீதியில் தேரோட்டம் நடைபெறுகிறது.