சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை தினத்தையொட்டி மே 25-ம் தேதி நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி ஐயப்பனை சபரிமலையில் குடியமர்த்தி பிரதிஷ்டை செய்ததன் நினைவாக ஆண்டுதோறும் பிரதிஷ்டை தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு வருகிற 25-ம் தேதி கொண்டாடப்படுவதை சபரிமலை ஐயப்பன் கோயில் (வியாழக்கிழமை) நாளை மாலை நடை திறக்கப்படுகிறது.
மே 25-ம் தேதி பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். படி பூஜைக்கு பின் இரவு 10.30 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படுகிறது.