மேலூர் திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் வைகாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாங்கொட்டை திருவிழா நடைபெற்றது.
திருவாதவூரில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பிரியாவிடை மற்றும் வேதநாயகி அம்பாளுடன் திருமறைநாதர் மேலூருக்கு எழுந்தருளினார்.
இது, மாம்பழ சீசன் என்பதால் மேலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் விழாவில் மாம்பழங்களைச் சூறை விடுவதால் மாங்கொட்டை திருவிழா என்று அழைக்கப்படுகிறது.
மே 26-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், மே-ல் தேரோட்டமும் நடைபெறுகிறது.