பழனியில் வைகாசி விசாக பத்து நாள் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.
அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் பழனி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 22-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
முக்கிய நிகழ்ச்சியாக மே 27-ல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், மே 28-ல் வைகாசி விசாகத்தன்று தேரோட்டமும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார். நேற்று மயில் வாகனத்தில் திருவுலா வந்தார். விழாவின் கடைசி நாளான இன்று சப்பரத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி, தெய்வானை உலா வருகின்றனர்.
திருஞானசம்பந்தருக்கு பாலூட்டும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதையடுத்து இன்றிரவு கொடியிறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.