தரமணி ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோயிலில் ஸ்கந்த ஷஷ்டி விழா 

நேற்று தொடங்கி 13ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை தரமணி, இராஜாஜி தெருவிலுள்ள,  ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோவிலில் ஸகந்த ஷஷ்டி விழா விமர்சையாக நடைபெறுகிறது.
தரமணி ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோயிலில் ஸ்கந்த ஷஷ்டி விழா 


நேற்று (8 நவம்பர்) தொடங்கி 13ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை தரமணி, இராஜாஜி தெருவிலுள்ள,  ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோவிலில் ஸகந்த ஷஷ்டி விழா விமர்சையாக நடைபெறுகிறது.

இந்த விழாவை ஒட்டி, நவம்பர் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தினமும் இரவு 7 மணியளவில் ஸஹஸ்ரநாம அர்ச்சனை,  தீபாராதனை மற்றும் கற்பூர ஹாரத்தி நடைபெறும்.  13ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 9 மணியளவில் ஶ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமிக்கு  விஸேஷ அபிஷேகம் மற்றும் அதைத்  தொடர்ந்து கற்பூர ஹாரத்தியும் நடைபெறும். அன்று மாலை 6 மணி முதல் ஷண்முக ப்ரதி முக அர்ச்சனை ( ஆறு முக) அஷ்டோத்தரம் மற்றும் நைவேத்தியம் நடைபெறும்.

இரவு 7.30 மணியளவில்  ஶ்ரீ வல்லி தேவசேனா ஸமதே,  ஶ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி திருவீதி உலா நடைபெறும். இரவு 9 மணிக்கு மங்கள ஹாரத்தியுடன் ஸகந்த ஷஷ்டி விழா நிறைவு பெறும்.

அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு திருமுருகன் திருவருள் பெற்றுய்யும்படி கேட்டு கொள்கிறோம்.


தொடர்புக்கு :   94449 33965 / 98846 62071.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com