ராயபுரம் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
திருப்பூர் ராயபுரம் மத்திய வீதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணன் சுவாமி கோயில் திருப்பணி செய்து புதுப்பிக்கப்பட்டது. திருப்பணி நிறைவடைந்து நேற்று காலை 9.15-க்கு மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
விழாவில் இன்று காலை 7.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், பகல் 11.00 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி பக்தர் சங்கம் சார்பில் செய்திருந்தனர்.