விளம்பி வருட குருப்பெயர்ச்சி பலன்கள் (12 ராசிக்காரர்களுக்கும்) -2018

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி ஸ்ரீ விளம்பி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது புரட்டாசி மாதம் 18ம் தேதி..
விளம்பி வருட குருப்பெயர்ச்சி பலன்கள் (12 ராசிக்காரர்களுக்கும்) -2018

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி ஸ்ரீ விளம்பி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது புரட்டாசி மாதம் 18ம் தேதி (அக்டோபர் - 04 - 2018 ) அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். 

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:
அக்டோபர் - 04 - 2018  அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
பணக்கஷ்டத்தாலும், சில உடல் உபாதைகளாலும் அவதிப்பட்டு வந்த மேஷ ராசி அன்பர்களே, சனி பகவான் தனது மூன்று, ஏழு மற்றும் பத்தாம் பார்வையால் உங்கள் ராசியின் தந்தையார் ஸ்தானம், மூத்த மற்றும் இளைய சகோதர ஸ்தானங்களை பார்க்கிறார். இதனால் இது வரையில் சில மன சஞ்சலங்கள் குடும்பத்தில் தோன்றி இருக்கும். இனி குரு பார்வையால் அவை அகலும். அவர்களிடம் எதையும் கலந்து ஆலோசித்து செய்ய வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கும். இதனால் பிரச்சனைகள் அவ்வளவாக வராது. 

குடும்ப ஸ்தானத்தை குரு தனது ஏழாம் பார்வையால் பார்க்கிறார். உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இதுவரை தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். திருமணத் தடை, குழந்தை பாக்கியத்தில் தடை போன்றவை குருவின் பார்வையால் சரியாகும். சுகஸ்தானத்தையும் குரு பார்க்கிறார். சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நடந்தேரும். வீட்டிற்கு தேவையான அனைத்து பொருள்களையும் வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் உடல்நிலையில் தொய்வு இருந்திருந்தால், அவர்கள் முன்னேற குரு பகவான் அருள்புரிவார். தந்தையாருடன் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். இருவரும் பேசி முடிவுகளை எடுப்பீர்கள். 

தொழில் ஸ்தானத்தில் கேது சஞ்சாரம் செய்ய ராகு தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் சில நஷ்டங்களையும், நலிவுகளையும் சந்தித்திருப்பீர்கள். எடுத்த காரியத்தில் தடை, முதலீடு செய்த அசல் கிடைக்காமல் நஷ்டம் என மோசமாக இருந்த காலகட்டம் மாறும். குருவின் பார்வை உங்கள் விரைய ஸ்தானத்தின் மீதும், தன ஸ்தானத்தின் மீதும் விழுவதால் உங்களுக்கு தொழிலில் இதுவரை விரையமான பணம் திரும்ப கிடைக்கும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உங்களை ஏமாற்றுபவர்களை கண்டுபிடிப்பீர்கள். 

உத்யோகஸ்தர்களுக்கு இதுவரை வரவேண்டிய பணம் வந்து சேரும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். அது உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கும். வேலையில் இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். முழு மனதுடன் வேலையில் ஈடுபடுவீர்கள். நீங்கள் நிம்மதியாக வேலை செய்யும் சூழல் உருவாகும். 

பெண்களுக்கு சிறப்பான பெயர்ச்சியாகவே இந்த குரு பெயர்ச்சி இருக்கும். சுக்ரன் வீட்டை குரு தனது ஏழாம் பார்வையாக பார்க்கிறார். பெண்களின் காரியங்கள் அனைத்திலும் குரு பகவான் துணை நிற்பார். காரியத்தடைகள் விலகும். 

மாணவர்களுக்கு பெரிய மாற்றம் இல்லை என்றாலும், கெடுதலும் இல்லை. எனவே நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்பட்டால் பின்னடைவு இல்லை. குரு உங்கள் வாக்கு ஸ்தானத்தைப் பார்ப்பதால் நீங்கள் உங்கள் பேச்சுத்திறமையால் முன்னேற முடியும். எந்த சந்தேகமாக இருந்தாலும் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள். 

அரசியல்துறையினருக்கு முன்னேற்றம் தரும் பெயர்ச்சியாக இருக்கும். உங்கள் மேலிடத்தில் இருந்து உங்களுக்கு சில புதிய மற்றும் முக்கிய பொறுப்புகள் தருவார்கள். அவற்றை சிரத்தையுடன் செயல்படுத்தினால் உங்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். 

கலைத்துறையினர் லாபம் கிடைக்கப் பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கதை எழுதுபவர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரிக்கும். தாயாரிப்பாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள். 

அஸ்வினி:
இந்த குரு பெயர்ச்சியில் நிதி நிலைமை சீராக இருக்கும். குடும்பச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். அதனால் மன நிறைவைத் தரும். உடல் உபாதைகள் உஷ்ணம் சம்மந்தப் பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

பரணி:
இந்த குரு பெயர்ச்சியில் வேலை பார்த்து வரும் அன்பர்களுக்கு நிறுவன மாற்றமோ, அல்லது ஊர் மாற்றமோ ஏற்படக் கூடும். அதனால் உங்களுக்கு நன்மையே ஏற்படும். வருமானமும் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த குரு பெயர்ச்சியில் கடின உழைப்பு இருக்கும். அதற்கான முன்னேற்றம் இருப்பதால் அது பற்றி கவலைப் பட வேண்டி இருக்காது. மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு நல்லபடியாக இருக்கும். கடன் வாங்க வேண்டி வரலாம்.

பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லி வர உங்களுக்கு வர இருக்கும் அவமானங்களைத் தவிர்க்கலாம்.

{pagination-pagination}

ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:
அக்டோபர் - 04 - 2018  அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
போராட்டமும், தடைகளுமே வாழ்க்கை என கலங்கிக் கொண்டிருக்கும் ரிஷப ராசி அன்பர்களே, குரு பகவான் இந்தப் பெயர்ச்சியின் மூலம் உங்கள் களத்திர ஸ்தானத்திற்கு வருகிறார். அத்துடன் உங்கள் ராசியை ஏழாம் பார்வையாக பார்க்கிறார். குரு பகவான் பார்க்க பலம் என்பதை மனதில் வைத்து தன்னம்பிக்கையுடன் இருங்கள். மனம் தளர வேண்டாம். 

குடும்பத்தில் இருந்த மனக் குழப்பங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். உங்களை அவமானப் படுத்தியவர்கள் எல்லாம் உங்களை ஆச்சரியமுடன் பார்க்கும் காலமாக இது இருக்கும். உங்கள் மனம் தெளிவடையும். பிரச்சனைகளுக்கான தீர்வுகள் உங்கள் முன் வரும். அதை பயன்படுத்தி உங்கள் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளுங்கள். ஆடை, ஆபரணம், வாகனம் போன்ற நீங்கள் எதிர்பார்த்திருந்த அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். 

தொழிலைப் பொறுத்தவரை  தொழில் ஸ்தானமாகிய பத்தாம் இடத்தை சனி பார்த்துக் கொண்டிருப்பதால் தொழிலில் இருந்து வந்த மந்தநிலை இனி குருபகவான் பாக்கிய ஸ்தானமாகிய ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பதால் அதில் ஓரளவிற்கு முன்னேற்றத்தை காணலாம். இழுபறியாக இருந்த பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். ஆர்டர் இல்லை என திருப்பி அனுப்பிய அனைவரும் உங்களைக் கூப்பிட்டு புதிய ஆர்டர்களைக் கொடுப்பார்கள். ஏற்றுமதி -  இறக்குமதி தொழிலில் நல்ல லாபத்தைக் காண முடியும். 

உத்தியோகத்தைப் பொறுத்தவரையில் சிறிது மந்த நிலை காணப்பட்டாலும்  அவர்கள் பதவிஉயர்வுக்கான தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலகத்தில் அனைவராலும் கேளிக்கைக்கு ஆளாகிய நீங்கள் குருவின் அனுகிரகத்தால் ஓரளவிற்கு மதிப்பு, மரியாதையுடன் நடத்தப்பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும். உடன் பணிபுரிபவர்களிடம் கடன் வாங்கியிருந்தால் அதை வரும் காலங்களில் அதை திருப்பிச் செலுத்தி விடுவீர்கள். 
பெண்களுக்கு களத்திர ஸ்தானத்திற்கு குரு வருவதால் சிலருக்கு திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். திருமண வாழ்வில் விவகாரத்து வரை சென்றவர்கள் கூட குருவின் கடாட்சத்தால் பிரச்சினைகளை தீர்த்து ஒன்று சேர வாய்ப்புள்ளது. புதிய ஆடை, ஆபரணங்கள் புதிதாக வாங்கி மகிழ்வீர்கள். 

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த வந்த மந்த நிலை மாறி ஓரளவிற்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். நண்பர்களுடன் பழகும் போது சற்று எச்சரிக்கையுடன் பழகி வாருங்கள். நட்பு வட்டாரம் அதிகரிக்கும். மேற்படிப்பு விசயங்கள் தள்ளிப் போய்க் கோண்டிருந்ததல்லவா இப்போது அது சரியாகி உங்கள்  கல்வியைத் தொடர அழைப்புகள் வரும். 

அரசியல் துறையினருக்கு கட்சிப் பணியில் தொய்வு வரலாம். அதிரடி முடிவுகள் கட்சியில் எடுக்கப் படும். அது உங்களுக்கு வருத்தம் தருவதாக இருக்கும். ஆனாலும் தானுண்டு தன் வேலையுண்டு என்று உங்கள் கடமைகளை மட்டும் செய்து வருவீர்கள். 

கலைத்துறையினருக்கு குரு சுக்கிரன் வீட்டைப் பார்ப்பதால் நிறைய பட வாய்ப்புகள் வரும். அழகு கூடி காட்சியளிப்பீர்கள். புதிய வாய்ப்புகள் வந்து உங்களை மெருகேற்றும். மூத்த கலைஞர்கள் உங்கள் பெயரை முன்மொழிவார்கள். 

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
இந்த குரு பெயர்ச்சியில் சூழ்நிலை காரணமாக மனச் சங்கடம் ஏற்படும். மற்றவர்களுக்காக நீங்கள் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பீர்கள். அதனால் மன உளைச்சல் அதிகமாகும். வருமானத்திற்கு குறைவிருக்காது.

ரோகிணி:
இந்த குரு பெயர்ச்சியில் வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். மேலிடத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரலாம். தக்க சமயத்தில் ஒருவருக்கு உதவி புரிவீர்கள்

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:
இந்த குரு பெயர்ச்சியில் சிலரிடம் கண்டிப்பாக நடந்து கொள்வீர்கள். உங்களுக்கு பிடித்தமான ஆலயத்திற்குச் சென்று வருவீர்கள். விலையுயர்ந்த பொருள் ஒன்றை பரிசாக பெறுவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள்.

பரிகாரம்:
வெள்ளிக்கிழமை தோறும் மஹாலட்சுமிக்கு மல்லிகை மலர் அர்பணித்து வர வாழ்க்கைத் துணையுடனான பிரச்சனைகள் குறையும். 

{pagination-pagination}

மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

கிரகநிலை:
அக்டோபர் - 04 - 2018  அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
சாதுர்யமிக்க பேச்சால் அனைவரையும் கவரும் மிதுன ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்கு குருபகவான் வருகிறார். உங்களுடைய ராசிக்கு தொழில் ஸ்தானத்தை குரு பார்க்கிறார். விரய ஸ்தானமாகிய ரிஷப்த்தை பார்க்கிறார். தனம், குடும்ப, வாக்கு ஸ்தானத்தையும் குரு பார்க்கிறார். அவரது பார்வை உங்கள் தொழிலை அமோகமாக நடத்துவதற்கு உதவச் செய்யப் போகிறது. குடும்ப ஸ்தானத்தின் மீதும் அவர் பார்வை படுவதால் அதையும் சிறப்பித்துச் சொல்லலாம். 

குடும்ப ஸ்தானத்தை குரு தனது ஒன்பதாம் பார்வையால் பார்க்கிறார். குடும்பத்தில் அனைவரும் உங்களை மதித்து, உங்கள் பேச்சுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி  மகிழ்வீர்காள். நீண்ட நாட்களாக உடம்பில் இருந்த நோய் குணமாகும். சுக ஸ்தானத்தில் சனிபகவான் இருப்பதைத் தவிர எந்த் தொந்தரவும் இருக்காது . அதுவும் அவர்  புதன் வீடான கன்னியைப் பார்ப்பதால் உங்களுக்கு கவலை வேண்டாம். 

தொழில் ஸ்தானத்தை குரு தனது ஐந்தாம் பார்வையாலும், தன ஸ்தானத்தை தனது ஒன்பதாம் பார்வையாலும் பார்ப்பதால் தொழிலில் இது வரை இருந்த தடைகள் விலகும். அவரே தொழில் ஸ்தானாதிபதியும் ஆகிறார். அவர் தனது நட்சத்திரமான விசாகத்தின் சாரமும் பெற்றிருப்பதால் இந்த குரு பெயர்ச்சி உங்கள் தொழிலின் உச்சத்தை நீங்கள் அடைய வழி வகுக்கும். கிடைக்கும்.

உத்யோகஸ்தர்கள் உங்களின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்திருப்பீர்கள். அவை இப்போது உங்களுக்கு விரும்பிய படியே கிடைக்கும். கவலை வேண்டாம். உங்களின் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று இது வரை நீங்கள் அடைந்த மனக்கஷ்டம் இனி தீரும். 

பெண்களுக்கு நிம்மதியான காலகட்டமாக இருக்கும். சரியான நேரத்தில் உறங்காமல் தவித்து வந்த காலகட்டங்கள் மாறும். பயணம் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். பயணம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கவலை வேண்டாம். 

மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் அகலும். சிலர் பாதியில் நிறுத்திய படிப்பைத் தொடரவும் வாய்ப்பு கிடைக்க்கும். பணத்தால் தடைபட்ட கல்வியும் சிலருக்கு தொடர வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியருடன் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் மாறும். 

அரசியல்துறையினருக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும். வரவேண்டிய பணம் வந்து சேரும். அடிக்கடி வெளியூர் சென்று வரவேண்டியதிருக்கும். புதிய தொழில் தொடங்கும் யோகமும் உண்டாகும். 

கலைத்துறையினருக்கு யோகமான காலகட்டம். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அடிக்கடி வெளியூர் சென்று வருவீர்கள். உங்களின் பெயர் அனைவருக்கும் தெரியும் வகையில் சில முக்கிய படங்களில் நடிப்பீர்கள். 

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த குரு பெயர்ச்சியில் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். கணவன், மனைவி ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து போவது பிரச்சினைகளை தவிர்க்கும். தெய்வத்தை வழிபட நன்மைகள் நடக்கும்.

திருவாதிரை:
இந்த குரு பெயர்ச்சியில் சிறு தடங்கல்கள் வரலாம். நன்மைகளை எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். வெளிநாடு செல்ல விரும்புவர்கள் சிறிது காலம் அதை ஒத்திப் போடுவது நல்லது. பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டிய கால கட்டம்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த குரு பெயர்ச்சியில் அலைச்சல் அதிகமாக இருக்கும். ஆனால் அதற்குத் தக்க வருமானமும், வெகுமதியும் கிடைக்கும். நல்லோர் சிலரை சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்: புதன் கிழமை தோறும் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபட பெரும் நோய்களினால் பாதிக்காமல் காக்கப்படுவீர்கள்.

{pagination-pagination}
கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:
அக்டோபர் - 04 - 2018  அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் சுகஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
சிறு சிறு உடல் உபாதைகளாலும், தூக்கமின்மையாலும் அவதிப்பட்டு வந்த கடக ராசி அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சி மிகவும் யோகமானதாக அமையப்போகிறது. குரு தனது ஒன்பதாம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்க்கிறார். உங்களின் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். உடல்நிலையினை நன்றாக கவனிக்கும் எண்ணம் தோன்றும். தூக்கத்தில் இருந்த தடைகள் விலகும். 

குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் பாக்கியத்திற்குக் குறைவிருக்காது. திருமண யோகம்,. குழந்தை பாக்கியம், புது மனை வாங்குதல், வாகனம் வாங்குதல் போன்ற சுப காரியங்கள் வரிசையாக நடக்கும். பண வரவும் சீராக இருக்கும் என்பதால் அவற்றை சரியான முறையில் முதலீடு செய்யுங்கள். பிற்காலத்திற்கு உதவியாக இருக்கும். 

தொழிலைப் பொறுத்த வரை குரு பகவானின் பார்வை உங்கள் லாப ஸ்தானத்தின் மீது விழுவதால், தொழிலில் சிறப்பான லாபத்தை அடையப் போகிறீர்கள். சரியான முறையில் முதலீடு செய்வீர்கள், உங்கள் லாபம் இரட்டிப்பாகும். சோம்பல் இன்றி உழைக்கும் எண்ணம் தோன்றும். இதனால் உற்பத்தி அதிகமாகும். உங்களின் உயர்வும் சிறப்பாக இருக்கும். தைரியமாக எதையும் கையாளுவீர்கள். 

உத்யோகஸ்தர்களுக்கு மேலிடத்துடன் இருந்த வந்த சில சச்சரவுகள் முடிவுக்கு வரும். உங்கள் பக்க நியாயத்தை எடுத்துக் கூற ஒரு வாய்ப்பு கிடைக்கும். இதனால் மேலிடம் உங்களின் மேல் வைத்திருந்த தவறான எண்ணத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பாக அமையும். 

பெண்களுக்கு கணவனுடன் இருந்துவந்த சில மனக்குழப்பங்கள் தீரும். மனதில் உற்சாகம் பிறக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். நஷ்டத்தில் தொழில் செய்தவர்களுக்கு லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த தொல்லைகள் அகலும். 

மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டு தெளிவடையுங்கள். மேனேஜ்மெண்ட் சம்பந்தமான படிப்புகளில் சிறந்து விளங்குவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உங்கள் திறமையை வெளிக்காட்டுவீர்கள். 

அரசியல்துறையினருக்கு சில முக்கிய பொறுப்புகள் மேலிடத்திலிருந்து கிடைக்கப்பெறும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையே அமையும். உங்களின் புகழ் அனைவருக்கும் தெரியவரும். உங்களின் ஒரு செயலால் மிகுந்த பாராட்டினைப் பெறப்போகிறீர்கள். 

கலைத்துறையினர் தற்போது கிடைக்கும் ஊதியத்தை விட அதிக ஊதியத்திற்க்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பொருளாதார வகையில் உங்கள் நிலை உயரும்

புனர்பூசம் 4ம் பாதம்:
இந்த குரு பெயர்ச்சியில் கணவன் - மனைவியரிடேயே சில ஊடல்கள் வரும். முக்கிய பொறுப்புகளை வகித்து வருபவர்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக உழைக்க வேண்டி வரும். வருமானம் திருப்தி கரமாக இருக்கும்.

பூசம்:
இந்த குரு பெயர்ச்சியில் பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டும். சக ஊழியர்களிடம் பகைமையை வளர்த்துக் கொள்ள நேரிடும்.  மனதில் இனம்புரியாத கவலை இருந்து கொண்டிருக்கும். தியானம் செய்ய நிம்மதி கிட்டும்.

ஆயில்யம்:
இந்த குரு பெயர்ச்சியில் பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள்.திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையலாம். வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும். கடன் வாங்க முயற்சிக்க வேண்டாம்.

பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அம்பாளுக்கு மல்லிகை மலர் சாற்றி வழிபட பூர்வீக சொத்துக்களில் இருக்கும் பிரச்சனைகள் தீரும்.

{pagination-pagination}
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:
அக்டோபர் - 04 - 2018  அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுகஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
திருமணத்தடை, குடும்பப்பிரச்சனை, பணப்பிரச்சனை போன்றவற்றில்  சிக்கித் தவித்த சிம்ம ராசி அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியால் குரு உங்களின் அஷ்டம ஸ்தானத்தையும், தொழில் மற்றும் விரைய ஸ்தானத்தையும் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு நான்காம் இடத்திற்கு குரு பகவான் வருகிறார். உங்களின் சுகாதிபதியான செவ்வாய் வீட்டில் குரு பகவான் சஞ்சரிக்க இருப்பதால் உங்களைப் புரிந்து கொள்ளாமல் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தெளிவாகும். இதனால் மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.

குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள், கணவன் - மனைவியிடையே சரியான புரிதல் இல்லாமை போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறீர்கள். இவை அனைத்தும் இந்த குரு பெயர்ச்சிக்குப் பிறகு மாறும். உங்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட அவமானங்கள் மாறும். மனதில் நிம்மதி பிறக்கும். இதனால் நிம்மதியான தூக்கம் வரும். கவலை வேண்டாம். உங்கள் வாழ்க்கைத்துணை உங்களைப் புரிந்து நடந்து கொள்வார். தாய் தாய்வழி உறவினர்களிடையே இருந்த பிரச்சினைகள் அகலும். 

தொழில் ஸ்தானமாகிய ரிஷபத்தை குரு பகவான் தனது ஏழாம் பார்வையாக பார்க்கிறார். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் ஏற்பட்டிருந்த தொய்வுகள் அகலும். நிறைய போராட்டத்திற்கு பிறகு நல்ல செய்திகள் தொழிலில் கிடைக்கப் பெறுவீர்கள். 

உத்யோகஸ்தர்கள் தங்கள் உடன் பணி புரிபவர்களிடம் கவனமாகப் பழகவும். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் போதும் கவனம் அவசியம். நீங்களே முன் சென்று என்னால் செய்ய முடியும் என்று உறுதி கொடுக்காதீர்கள். 

பெண்களைப் பொறுத்த வரை வேலை செய்யும் பெண்கள் லாபமடைவார்கள். வேலை சூழல் உங்களுக்கு ஏற்றதாக அமையும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிறு சிறு தொந்தரவுகள் தானாக மறையும். 

மாணவர்களுக்கு கல்விகாரகன் புதன் பகை ஆனாலும், புதன் வீட்டில் குரு நட்பாவதால் கல்வியில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். குரு  சுயசாரம் பெறுவதால் மேல்படிப்பு படிக்க விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் அமையும். 

அரசியல்துறையினருக்கு இருந்து வந்த பணக்கஷ்டங்கள் நீங்கும். உங்களின் குடும்ப உறுப்பினர்கள் உங்கள்  முடிவுக்கு ஒத்துழைக்காமல் இருந்த நிலை மாறும். உங்களைச் சுற்றி உள்ளவர்களால் உங்களுக்கு ஏற்பட்ட மனவருத்தங்கள் மாறும். 

கலைத்துறையினருக்கு முக்கியமான காலகட்டம் இது. உங்கள் துறையில் சிறப்பான வர வேற்பை எதிர்பார்க்கலாம். நீண்ட நாட்களாக நீங்கள் விரும்பிய ஒருவரது பாராட்டைப் பெறுவீர்கள்.

மகம்:
இந்த குரு பெயர்ச்சியில் சக வியாபாரிகளால் தொந்தரவு ஏற்படும். சேமிப்பிற்கு முயற்சி செய்யுங்கள். ஏனெனில் வருமானம் அதிகமாக வரும். எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களில் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். 

பூரம்:
இந்த குரு பெயர்ச்சியில் தங்களுக்கு உள்ள வேலையை மட்டும் சரியாக செய்யுங்கள். மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அது உங்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்து விடலாம். பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.

உத்திரம் 1ம் பாதம்:
இந்த குரு பெயர்ச்சியில் புதிய வீடு, வாகனம் போன்றவைகளில் அதிக லாபத்தை காணலாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் சரியான பேச்சுவார்த்தைகள் மூலம் லாபம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பெரியோர் ஆசி கிட்டும்.

பரிகாரம்:
ஞாயிற்றுக்கிழமை தோறும் சிவபெருமானுக்கு வில்வம் அர்ப்பணித்து வழிபட வாகனம் சம்பந்தமாக இருக்கும் தடை அகலும்.

{pagination-pagination}
கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:
அக்டோபர் - 04 - 2018  அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் தன வாக்கு ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
நினைத்ததையெல்லாம் முடிக்க நினைக்கும் கன்னிராசி அன்பர்களே! இப்போது உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு குருபகவான் பெய்ர்ச்சி ஆகிறார். அவர் மூன்றாம் இடத்திலிருந்து உங்களுக்குடையே களத்திர ஸ்தானமாகிய ஏழாம் இடத்தையும், ஒன்பதாம் இடமாகிய பாக்கிய ஸ்தானத்தையும், பதினொறாம் இடமாகிய இலாபஸ்தானத்தையும் பார்க்கிறார். குருபெயர்ச்சியால் உங்களுக்கு அதிக அளவில் நன்மைகள் நடைபெறுவதற்கே அதிக வாய்ப்புள்ளது.

குடும்பத்தை பொறுத்தவரை கணவன் - மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் விலகி இன்பமாக வாழ வழிபிறக்கும். இளைய சகோதரர்களிடையே இருந்த சண்டைகள், பிளவுகள் காணாமல் போகும். தந்தை வழியே வர வேண்டிய சொத்துகள், பிதுர் ராஜ்ஜிய சொத்துகளிலிருந்த பாகப் பிரிவினைகல் எந்த பிரச்சினையின்றி தீரும். வழக்குகள் ஏதாவது நடைபெற்றுக் கொண்டிருக்குமாயின் அது இந்த குருபெயர்ச்சிக்கு பிறகு உங்களுக்கு சாதகாம தீர்ப்புகள் வரும். 

தொழிலிலைப் பொறுத்தவரை உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சனி அமர்ந்து ஏழாம் பார்வையாக் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் சற்று மந்தநிலை காணப்பட்டாலும் குரு பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் சில வெற்றிகள் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வீண் பிரச்சினைகள் வந்து போகும். நம்பிக்கையாக யாரிடமும் எதையும் சொல்ல வேண்டாம். வெளிநாடுகளுக்கு செல்ல நினைக்கும் அன்பர்கள் இப்போது அதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள். 

பெண்களுக்கு திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து வரன்கள் அமையப் பெறுவீர்கள். பெற்றோர் உங்களுக்கு பார்த்து பார்த்து செய்வார்கள். கணவரிடம் அன்யோன்யம் அதிகரிக்கும். 
மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மேற்படிப்பில் அக்கறையுடன் படித்தால் மட்டுமே நல்ல வேலை எதிர்காலத்தில் அமையும். ஆசிரியர்கள் உங்களை சிறப்பாக வழி நடத்துவார்கள். 

அரசியல் துறையினருக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு ஆயத்தமாவீர்கள். சிலரது காரியங்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஆனால் கட்சியில் மிகப் பெரிய பதவிஉயர்வு கிடைக்கும். 

கலைத்துறையினருக்கு விருதுகள், பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாளைய கனவுகள் பலிக்கும். கிடைக்கக்கூடிய விருதுகள் வெளிநாடுகளுக்கு சென்றுவருவது போல் அமையும். தந்தை வழியாக வாய்ப்புகள் வந்து குவியும். 

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த குரு பெயர்ச்சியில் சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வீர்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் பேச்சில் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள்.புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

அஸ்தம்:
இந்த குரு பெயர்ச்சியில் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. குழப்பத்தின் காரணமாக முடிவுகள் தவறாக அமைந்து விடலாம். ஆதலால் உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரை துணைக்கு வைத்துக் கொள்வது மிகவும் உத்தமம்.

சித்திரை 1, 2, பாதங்கள்:
இந்த குரு பெயர்ச்சியில் சிலருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. தக்க நேரத்தில் உணவு அருந்த முடியாமல் அதனால் வயிற்று உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வியாபாரிகளுக்கு மனக்குழப்பங்கள் ஏற்படக் கூடும்.

பரிகாரம்:
தன்கிழமை தோறும் விஷ்ணுவிற்கு மல்லிகை மலர் அர்ப்பணித்து வணங்க சகோதரர்களிடம் இருக்கும் மனசங்கடங்கள் தீரும்.

{pagination-pagination}
துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

கிரகநிலை:அக்டோபர் - 04 - 2018  அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
நியாயத்தை உயிரென நினைக்கும் துலாராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு இரண்டாமிடமாகிய தனம் , வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். அவர் அங்கிருந்து ஆறாமிடமாகிய ரண, ருண, சத்ரு ஸ்தானத்தையும், எட்டாமிடமாகிய ஆயுள் ஸ்தானத்தையும், பத்தாமிடமாகிய தொழில் ஸ்தானத்தையும் சுபப்பார்வையாக பார்க்கிறார். 

குடும்பத்தை பொறுத்தவரையில் குருபகவான் அங்கு அமர்ந்திருப்பதால் வாக்கில் வன்மையும், பேச்சில் நிதானமும், செல்வாக்கும் அமையப் பெறுவீர்கள். குடும்பம் அமைதியாகவும், நிம்மதியாகவும் இருக்கும். தந்தையாரின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். தந்தை வழி சொத்துகளில் இருந்து வந்த பிரச்சினைகள் மட்டும் சனியில் பார்வையால் அவ்வப்போது வந்து போகும். 

தொழிலைப் பொறுத்தவரையில் குருபகவானின் சுபப் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீது இருப்பதால் தொழில் இருந்து வந்த தடைகள் அகலும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான லாபத்தை பகவான் வாரி வழங்கி விடுவார். தொழிலுக்கு தேவையான நிதி உதவிகள் தாராளமாக கிடைக்கும். 

உத்யோகஸ்தர்களுக்கும் இந்த குரு பெயர்ச்சி சாதகமாகவே இருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உடன் பணிபுரிபவர்களுடன் இருந்து வந்த மன வருத்தங்கள் அகலும். உடல் ஆரோக்கிய குறைவால் வேலைக்குச் செல்லாமல் இருந்தவர்கள் இப்போது வேலைக்குச் செல்வார்கள். 

பெண்களுக்கு சோம்பல் குறையும். உடலில் இருந்து வந்த சில குறைபாடுகளும் அகலும். அதனால் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உங்களை அவமதித்தவர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். மன்னிப்பும் கேட்பார்கள். 

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நீங்கள் எதிரியாய் நினைத்தவர்கள் கூட உங்களுக்கு நண்பர்கள் ஆவார்கள். கல்விக்காக வாங்கிய கடன் அடையும். உங்களின் கிரகிக்கும் தன்மை அதிகரிக்கும். 

அரசியல்துறையினர் வீண் அலைச்சல், கோவில் சார்ந்த விஷயங்களில் பிரச்சனை போன்றவற்றை சந்தித்திருப்பார்கள். அவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். விரையங்கள் குறையும். ஆன்மீக வேலைகளில் நாட்டம் அதிகரிக்கும். 

கலைத்துறையினருக்கு நிறைய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து தட்டிப்போயிருக்கும். இனி அவ்வாறு இருக்காது. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதன் மூலம் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்கள் அதிகம் இருந்தாலும் அவை அனைத்தும் உங்களின் முன்னேற்றத்திற்காகவே. அதிக உழைப்பை தர வேண்டியிருக்கும்.

சித்திரை 3, 4 பாதங்கள்:
இந்த குரு பெயர்ச்சியில் செய்யும் காரியங்கள் அனைத்திலுமே திருப்தியும், வெற்றியும் காணப்படும். குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தால் அனைவருடனும் அமர்ந்து பேசி நல்வழியில் தீர்வு எடுங்கள். அது உங்கள் எதிர்காலத்திற்கு உதவும்.

சுவாதி:
இந்த குரு பெயர்ச்சியில் இனம்புரியாத கவலை மனதில் குடி கொண்டிருக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தாங்கள் இப்போது உள்ள வேலையை மட்டும் கவனித்து வாருங்கள். எதிலும் நிதானத்துடன் முடிவு எடுங்கள். 

விசாகம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த குரு பெயர்ச்சியில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். சகோதர சகோதரிகள் யாரேனும் ஒருவர் உங்களுக்கு பிடித்தமான ஒன்றை பரிசாக அளிப்பார்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக அமையும்.

பரிகாரம்:
வெள்ளிக்கிழமை தோறும் மஹாலட்சுமிக்கு தாமரை மலர் அர்ப்பணிக்க குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரும்.

{pagination-pagination}

விருச்சிகம்:(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:
அக்டோபர் - 04 - 2018  அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:
தொழிலில் நஷ்டம், நிம்மதியின்மை என தவித்து வந்த விருச்சிக ராசி அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். விரைய ஸ்தானத்தில் இருந்த குரு இப்போது ராசிக்கு வருகிறார். இதன் மூலம் பஞ்சம ஸ்தானத்தையும், களத்திர ஸ்தானத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார். சனிபகவானால் ஏற்பட்ட பணகஷ்டம், உறவினர்களுடன் இருந்து வந்த தகராறுகள் என அனைத்தையும் குரு பகவான் சரி செய்வார்.

குடும்பாதிபதி குரு பகவான் ராசியில் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். அது சம்பந்தமான வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். கணவன் - மனைவி இடையே இருந்த மனஸ்தாபங்கள் அகலும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்பார்கள். உங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

தொழில் - வியாபாரம் எப்போதும் போல் இருக்கும் என்றாலும் உங்களின் இடைவிடாத முயற்சியால்  லாபம் பெறலாம். எதிர்பார்த்த லாபம் இல்லை என்று மனம் கலங்க வேண்டாம். நஷ்டம் இல்லாமல் தொழில் செய்ய பகவான் அருள் புரிவார். 

உத்யோகஸ்தர்களுக்கு அதிர்ஷ்டத்தால் சில வாய்ப்புகள் கிடைக்கும். வெளியில் கொடுத்த பணம் சில அலைச்சல்களுக்குப் பின் கிடைக்கும். சக ஊழியருடன் தேவையில்லாத வாக்கு வாதங்களில் ஈடுபடவேண்டாம். கிடைக்கும் நேரத்தை பயனுள்ளதாக கழிப்பதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். 

பெண்களுக்கு திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது உங்களுக்கு மன மகிழ்ச்சியைத் தரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

மாணவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். பெற்றோர்களின் தொழிலைப் படிப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். நன்றாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். சிறந்த குரு கிடைப்பார். 

அரசியல் துறையினருக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். மனைவி வழியில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து வாழ்வில் சந்தோஷம் பிறக்கும்.. மேலிடத்திலிருந்து அழைப்பு வரும். 
கலைத் துறையினருக்கு பொருளாதார ரீதியாக சிறப்பாக இல்லை என்றாலும், புகழ் ,பாராட்டு மற்றும் ரசிகர்கள் பெருகுவார்கள். உங்கள் சொந்த ஊரில் நல்ல பெயர் கிடைக்கும். 

விசாகம் 4ம் பாதம்:
இந்த குரு பெயர்ச்சியில் உற்றார், உறவினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்தில் நற்பெயர் கிடைக்கும். கால்நடைகள் அபிவிருத்தி அடையும். புதிய நிலம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.  

அனுஷம்:
இந்த குரு பெயர்ச்சியில் வியாபாரிகள் புது வாடிக்கையாளர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். ஏனெனில் வசூலாவதில் சிக்கல்கள் ஏற்படக் கூடும். மற்றபடி பிரச்சினைகள் ஏதும் வராது. பெற்றோருக்கு பெருமை தேடித் தருவீர்கள்.

கேட்டை:
இந்த குரு பெயர்ச்சியில் சுபவிரயங்கள் உண்டாகலாம். தங்களுக்கு சம்மந்தமான விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். எதிலும் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ள நன்மை நடக்கும்.

பரிகாரம்:
செவ்வாய்கிழமை தோறும் முருகப்பெருமானுக்கு அரளி மாலை சாற்றி வழிபட மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும்.

{pagination-pagination}
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)    

கிரகநிலை:
அக்டோபர் - 04 - 2018  அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
குடும்பத்தில் சில சஞ்சலங்களாலும், தொழிலில் சில மனஸ்தாபங்களாலும் சிரம்மப்பட்டு வந்த தனுசு ராசி அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியால் சில நல்ல பலன்களைப் பெறப்போகிறீர்கள். குரு பகவான் உங்களின் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். இதன் மூலம் உங்களின் சுகஸ்தானத்தையும், ரண ருண ரோக ஸ்தானத்தையும் மற்றும் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தையும் பார்க்கிறார். ஜென்ம சனியால் ஏற்படும் சில இடர்பாடுகளை குரு பகவான் நிவர்த்தி செய்வார். எனினும் உங்கள் ராசிக்கு மறைந்து  பன்னிரெண்டில் சஞ்சாரம் செய்வதால் சுப விரையங்களைத் தருவார்.

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். உங்கள் பேச்சைக் கேட்காதவர்களும் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள். தாயார் தாய் வழி உறவினர்கள் உங்களுடன் உறவாட வரலாம். அவர்களுடனான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். உங்கள் மனதில் இருந்து வந்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 

தொழில் - வியாபாரத்தைப் பொறுத்தவரை சில புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். அவை பிற்காலத்தில் லாபம் தரக்கூடியனவாகவே இருக்கும். கவலை வேண்டாம். நீங்கள் எதிர்பார்த்திருந்த கடன் கிடைக்கும். இதன் மூலம் தொழிலை விரிவு செய்வீர்கள். உங்களுக்குப் போட்டியாக இருந்தவர்கள் அனைவரும் விலகி விடுவார்கள். 

உத்யோகஸ்தர்களுக்கு லாபமான காலமாக இருக்கும். எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து சில காலம் வெளியூரில் தங்க நேரிடலாம். உடல் நிலையில் இருந்து வந்த பின்னடைவு சரியாகும். 

பெண்களுக்கு காரியங்களில் வெற்றி கிடைக்கும். தாய் வழி உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் நலனில் முன்னேற்றம் உண்டாகும். தீராத நோயினால் அவதிப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். 

மாணவர்களுக்கு கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். கல்விக் கடன் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் படிப்பிற்காக விலை உயர்ந்த பொருள் ஒன்றை வாங்குவீர்கள். 
அரசியல்துறையினருக்கு சாதகமான காலமாக இருக்கும். பண வரவு எதிர்பார்த்த படி இருந்தாலும், எதிர்பாராத செலவுகளும் இருக்கும். உங்களை விமர்சனம் செய்து வந்த எதிரிகள் காணாமல் போவார்கள். 

கலைத்துறையினர் தங்களின் முன்னேற்றத்திற்காக செலவிட வேண்டி இருக்கும். மேலும் வாய்ப்புகளும் தேடி வரும் என்பதால் கவலை வேண்டாம். 

மூலம்:
இந்த குரு பெயர்ச்சியில் பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும்.  

பூராடம்:
இந்த குரு பெயர்ச்சியில் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறு உபாதைகளாக இருந்தாலும் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து வருவது தான் சிறந்தது. எதிர்பாராத திருப்பம் வந்து மனதிற்கு தொல்லை ஏற்படுத்தக் கூடும். 

உத்திராடம் 1ம் பாதம்:
இந்த குரு பெயர்ச்சியில் நிதி நிலைமை திருப்தி தரும். செலவுகள் அதிகமாக ஏற்பட்டாலும் அதை சுலபமாக சமாளித்து விட முடியும். கணவன் -  மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதரரால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கவனம் தேவை.

பரிகாரம்:
வியாழக்கிழமை தோறும் நவகிரக குருபகவானுக்கு விளக்கேற்றி வழிபட தூக்கத்தில் இருக்கும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

{pagination-pagination}
மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்) 

கிரகநிலை:
அக்டோபர் - 04 - 2018  அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
குடும்பப் பிரச்சனைகளாலும், உடல் அசௌகரியத்தாலும் அவதிப்பட்டு வந்த மகர ராசி அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான்  உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு வருகிறார். இதன் மூலம் அவரது பார்வை தைரிய ஸ்தானம், பஞ்சம் பூர்வபுண்ணிய ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது. இதனால் குடும்பம் மற்றும் தெய்வீக காரியங்களில் நல்ல பலன்களை பெறப்போகிறீர்கள். 

குடும்ப ஸ்தானத்தை சனிபகவான் பார்த்தாலும் அவரே குடும்பாதிபதி ஆனதால் சிறு பிரச்சனைகளை மட்டும் சந்தித்துவந்தீர்கள். தற்போது குரு பகவானின் ஒன்பதாம் பார்வை உங்களின் களத்திர ஸ்தானத்தின் மீது படிவதால் அந்த பிரச்சனைகளும் தீரும். நிம்மதி அடைவீர்கள். 

தொழில் - வியாபாரம் சிறப்பான முறையில் நடைபெறும். ராசியாதிபதி உங்கள் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதாலும், அவரே தொழில் காரகன் ஆனதாலும் தொழிலில் எந்த வித இடையூறும் இருக்காது. நீங்கள் நினைத்த லாபம் கிடைக்கும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். 

உத்யோகஸ்தர்களுக்கு உங்களின் சிறந்த பணிக்கான விருதுகள் கிடைக்கப் பெறுவார்கள். மேலிடம் உங்களை பாராட்டும் அளவிற்கு உங்கள் வேலை இருக்கும். பண உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். 
பெண்களுக்கு சின்ன சின்ன உதவிகள் தாராளமாக கிடைக்கப் பெறுவீர்கள். தேவையான பொருள்களுக்கு தடை வராது. கணவன் - மனைவிக்கிடையே சின்ன சின்ன ஊடல்கள் வந்து போகும். 

மாணவர்களுக்கு படிப்பில் கவனக் குறைவு ஏற்படும். கனவுகளுக்கு இடம் கொடுக்காமல் என்ன நிஜம் என்பதை புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கைக்கும் அது வெற்றியைக் கொடுக்கும். 

அரசியல் துறையினருக்கு கட்சியில் நல்ல பலன்களை உங்களுக்கு சாதகமாக எதிர்பார்க்கலாம். சில விசயங்கள் உங்கள்  மனதிற்கு கசப்பாக இருந்தாலும் அதை தாங்கிக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு செல்வீர்கள். 

கலைத்துறையினருக்கு  எதிர்பார்த்திருந்த இடத்திலிருந்து அழைப்புகல் வரலாம்.  பெரிய நிறுவனங்கள் உங்களின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்வதற்கு வாய்ப்புள்ளது. சில ஆவணங்களை படித்து பார்த்து கையெழுத்திடுங்கள். 

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த குரு பெயர்ச்சியில் பிடித்தமானவர்களை சந்திக்க நேரலாம். அதனால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். சக பாகஸ்தர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கூடியவரை வீண் விவாதங்களில் ஈடுபடாமலிருப்பது நல்லது.

திருவோணம் :
இந்த குரு பெயர்ச்சியில் சிக்கனமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.  பண உதவி எதையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் கிடைப்பதற்கான சாத்தியக் கூறு அதிகம் உள்ளது.

அவிட்டம் 1,2 பாதங்கள்:
இந்த குரு பெயர்ச்சியில்  பிள்ளைகள் விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் திருமணம் நிச்சயிக்கப்படலாம். விரக்தி மனப் பான்மையை விட்டொழியுங்கள்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சிவபெருமானை வழிபட பணம் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.

{pagination-pagination}
கும்பம்:  (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்)

கிரகநிலை:
அக்டோபர் - 04 - 2018  அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
உழைப்பினால் முன்னேற்றத்தைக் காண துடிக்கும் கும்ப ராசி அன்பர்களே! இது நாள் வரை ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தில் இருந்த குருபகவான் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகி வருகிறார். அவர் அங்கிருந்து ஐந்தாம் பார்வையாக தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக சுகஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக ஆறாமிடமான ரண, ருண, ரோக , சத்ரு ஸ்தானத்தையும் பார்த்து அருள் புரியப் போகிறார். 

குடும்பத்தைப் பொறுத்தவரை உங்களுடைய குடும்பாதிபதியும் குரு ஆகையால் அந்த இடத்தை குரு பகவானின் பார்வை படுவதாலும் குடும்பம் சுபிட்சமாகவும் , ஆனந்தமாகவும் இருப்பதில் எந்த ஐயமும் இல்லை. குடும்பத்தில் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். அனைவரும் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கான சூழ்நிலைகள் உள்ளது. செல்வாக்கும், சொல்வாக்கும் மிகுதியாகும். 

தொழிலில் எந்த ஒரு பிர்ச்சினைகளும் இருக்காது. சக பங்குதாரர்களும் உங்கள் பேச்சில் கட்டுப்பட்டு இருப்பார்கள். ஒத்துழைப்பு கொடுத்து புதிய விஸ்தரிப்புகளும் செய்யும் அளவிற்கு உங்களுக்கு மனதை திருப்தி படுத்துவார்கள். சிறு வியாபாரிகள் கூட நல்ல லாபத்தைப் பெற்று வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். வேலையில் உங்களுக்கு  இருந்த சத்ருகள் விலகி விடுவார்கள். நண்பர்கள் போல மாறி உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுப்பார்கள். சக பணியாளர்களின் ஆதரவும், உதவியும் உங்களுக்கு கிடைப்பதால் நீங்கள் வேலையை சுலபமாக செய்து முடிப்பீர்கள். 

பெண்கள் வேண்டிய வசதிகள் குடும்பத்தில் கிடைக்கும். அனைத்து வசதிகளும் கேட்காமலேயே கிடைப்பதால் மனதில் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும். மாமியார் -மருமகள் அமைதியான சூழ்நிலை உண்டாகும். 

மாணவர்களுக்கு கல்வியில் அதிக ஆர்வம் உண்டாகும். குறித்த நேரத்தில் அனைத்து பாடங்களையும் கற்று ஆசிரியர் பாராட்டைப் பெறுவீர்கள். அதிகாலை எழுந்து பாடங்களை படிப்பதே சிறந்தது என்பதை   மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 

அரசியல்வாதிகள் கடைப்பிடிக்க வேண்டிய  கொள்கைகளை கவனமாக பின்பற்றுவீர்கள். கட்சியில் தேவையான நிதி உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மக்களிடையே அதிக செல்வாக்கு உண்டாகும். 

கலைத்துறையினருக்கு அதிக வருமானம் கிடைப்பது மனதிற்கு நிம்மதியை அளிக்கும். இசைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் ஆகியோருக்கு விருதுகள் பரிந்துரைக்கப்படும். 

அவிட்டம் 3, 4 பாதங்கள்:
இந்த குரு பெயர்ச்சியில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். நீங்கள் எதிர் பார்த்து கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக ஒவ்வொன்றாக நடந்தேறும் என்பதில் ஐயம் வேண்டாம். 

சதயம்:
இந்த குரு பெயர்ச்சியில் அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தூக்கமின்மை ஏற்படும் மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சுத்தமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்:
இந்த குரு பெயர்ச்சியில் நல்ல விசயங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக நடக்கும். சிலர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் திறமையை நீங்கள் பாராட்டி அவர்களுக்கு சன்மானமும் உங்கள் கையால் வழங்குவீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் முன்னோர்களை வழிபட வேலையில் இருக்கும் பிரச்ச்சனைகள் அனைத்தும் தீரும்.

{pagination-pagination}
மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:
அக்டோபர் - 04 - 2018  அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
உங்கள் ராசியாதிபதியான குருபகவான் இது நாள் வரையில் அஷ்டம குருவாக உங்கள்  ராசிக்கு எட்டாம் இடத்தில் அமர்ந்திருந்தார். இனி ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். தொட்டது துலங்கும் கால கட்டம் துவங்கப் போகிறது. 

குடும்பத்தைப் பொறுத்தவரை தன்னுடைய புத்தியில் அனைவருக்கும் அறிவுரை செய்து கொண்டிருப்பீர்கள். மிகவும் அழகான தோற்றப் பொலிவுடன் காணப்படுவீர்கள். தீடீரென புதிதாக ஆடை வாங்கி உடுத்திக் கொள்வீர்கள். நல்ல குணநலன்களை பின்பற்றுவீர்கள். குருபகவான் ஏழாம் பார்வையாக உங்கள் தைரிய வீரிய ஸ்தானத்தை பார்ப்பதால் உங்களுக்கு எந்தக் காரியத்திலும் தைரியமாக இறங்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். காரியத்திலும் கண்ணும் கருத்துமாக இருந்து வருவீர்கள். 

தொழிலைப் பொறுத்தவரை உங்கள் தொழில் ஸ்தானத்தில் ஏற்கனவேதொழில் காரகனாகிய  சனிபகவான் அமர்ந்திருப்பதால் அதைப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். நல்ல முக்கியஸ்தர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். 

உத்தியோகஸ்தர்கள் பலரது பாராட்டுகளைப் பெறுவீர்கள். மனக்கவலைகளை மறந்து உற்சாக மிகுதியாக காணப்படுவீர்கள். சிலருக்கு தந்தை பார்த்து வந்த வேலை அவரது ஓய்வுகாலத்திற்கு பிறகு உங்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு. அதற்கான முயற்சியை நீங்கள் செய்யுங்கள். 

பெண்கள் மிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆடை, நிறைய தங்கம் போன்றவை சேரும். சிலர் புதிய சேமிப்பை துவங்குவீர்கள். குடும்பத்திற்கான எதிர்கால நற்திட்டங்களை திட்டம் போட்டு செய்வீர்கள். 

மாணவர்கள் தைரியமாகவும், தெளிவாகவும் இருப்பார்கள். கல்வியில் இருந்து வரும் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளை எதிர்கொள்ளும் போது மனதில் திடமும், தைரியமும் உண்டாகும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் தந்தையாரால் செல்வாக்கு உண்டாகும். எதிர்பார்த்த கட்சிப்பதவிகள் கிடைக்கும். அவர் வழி சொத்துகளும் உங்களுக்கு பிரச்சினையின்றி வந்து சேரும். 
கலைத்துறையினருக்கு நல்ல பாராட்டுகளும், விருந்துகளும் கிடைக்கப் பெறுவீர்கள். உயரிய விருதுகளுக்கும் உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். தந்தை உங்களுக்கு ஆதரவு நல்குவார். 

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த குரு பெயர்ச்சியில் அலைச்சல் அதிகமாக இருப்பதுடன் உடல் சோர்வும் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே அமையும், கவலை வேண்டாம். மகன் அல்லது மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வீர்கள். 

உத்திரட்டாதி:
இந்த குரு பெயர்ச்சியில் அடிக்கடி உங்களை நீங்களே பெருமையாக பேசிக் கொள்வீர்கள். நீண்ட தூர பயணங்கள் ஏற்படலாம், அது உங்களுக்கு வெற்றிக்காகவே இருக்கும் என்பதை மனதில் வையுங்கள்.

ரேவதி:
இந்த குரு பெயர்ச்சியில் பிரச்சினைகள் பெரிதாக வராது. உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டி வரும். சிலருக்கு அலர்ஜி சம்மந்தமான உபாதைகள் வந்து மறையும். வருமானத்திற்கு குறை ஏற்படாது.

பரிகாரம்:
பழைய கோவில்களுக்கு தீபமேற்றுவதற்கு எண்ணெய் வாங்கிக் கொடுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com