அக்டோபர் மாதம் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்?

அக்டோபர் மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.
அக்டோபர் மாதம் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்?

12 ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயனடைவோம். 

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

நினைத்ததை நடத்திக்காட்டும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானாதிபதி மற்றும் அயன, சயன, போக, விரய ஸ்தானாதிபதியான குரு பகவான் ஏழாமிடத்திலிருந்து  அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாமிடமான தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்திற்கு கிடைப்பதால் உங்கள் வாக்கில் வன்மை அதிகரிக்கும். 

குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். உறவினர்களிடையே  உங்கள் பேச்சிற்கு முக்கியத்துவம் இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். உறவினர்கள் வழியில் இருந்த மனக்கசப்பு அகலும். மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் சம்பவங்கள் நிகழக் கூடிய கால கட்டம்.

தொழிலைப் பொறுத்தவரையில் தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் உச்சமாக இருப்பதால் பொறுப்புகளும், வேலைகளும் அதிகரித்து காணப்படும். தொழிலில் நல்ல பணவரவு உண்டாகும். வியாபாரிகள் அபரிவிதமான முன்னேற்றமும் ஆற்றலும் பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பணியாற்றுபவர்களுடன் இருந்த பிரச்சினைகள் அகலும். வங்கி மூலமாக நடைபெறும் காரியங்கள் ஏதேனும் இருப்பின் அது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

கலைத்துறையினருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கைநழுவி போகலாம். மற்றவர்கள் பாராட்டுக்கு மயங்கி எந்தவொரு நிகழ்விலும் நிதானத்தை இழக்க வேண்டாம். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். முக்கிய முடிவுகளை சற்று யோசித்து நிதானத்துடன் எடுக்க ஆபத்து அண்டாது.

அரசயில்வாதிகளுக்கு உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி, பொறுப்புகள் உங்களையே வந்தடையும். எதிர்பார்த்த ஒவ்வொரு விசயங்களிலும் நன்மையே கிட்டும். எதிரிகளைவிட உடனிருப்போரிடம் கவனம் வையுங்கள். குல தெய்வத்தை வழிபட்டு காரியங்களை வெற்றியுடன் நடத்தி வாருங்கள். யார் மனதையும் புண்படுத்தாமல் இருப்பது மிக முக்கியம்.

பெண்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கக் கூடிய காலகட்டம். வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இருக்கும் வீட்டை புதுப்பிக்க கூட எண்ணலாம். மொத்தத்தில் உற்சாகமான மாதம்.

மாணவர்கள் கல்வியில் நாட்டம் அதிகரித்து காணப்படும். நண்பர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது.  ரகசியத்தை காப்பாற்றி வையுங்கள்.

அஸ்வினி:
இந்த மாதம் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும்.

பரணி:
இந்த மாதம் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். 

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். மாணவர்களுக்கு  கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். 

பரிகாரம்: திங்கட்கிழமைதோறும் அம்மன் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட துன்பங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, புதன்

சந்திராஷ்டம தினங்கள்: 12, 13, 14

அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7

                                           {pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் அஷ்டமாதிபதியும், லாபஸ்தானாதிபதியுமாகிய  குரு பகவான்  உங்கள் ராசிக்கு ஆறாமிடமான ரண ருண சத்ரு ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அவரின் பார்வை  லாபஸ்தானத்திற்கும் , உங்கள் ராசிக்கும், மூன்றாமிடமான தைரிய வீரிய ஸ்தானத்திற்கும் கிடைக்கிறது.

குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். கணவனால்  மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் யோகம் உண்டாகும். இளைய சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தார் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பங்காளிகள் சண்டை முடிவுக்கு வரும். வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி உண்டாகும். தடைப்பட்டிருந்த காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்தேறும். பிரிந்திருந்த உறவுகள் ஒன்று சேரும்.

தொழிலில் நல்ல லாபமும், வெற்றியும் கிடைக்கப் பெறுவீர்கள். தொய்வு பெற்றிருந்த தொழிலாளர்கள் நல்ல லாபத்தை காண்பார்கள். நீண்ட நாட்களாக தேங்கியிருந்த பொருட்கள் விற்று தீர்க்கப்படும். வியாபாரிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள் விருத்தி அடையும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர்பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவர். வேலை மாறுதல் வேண்டுவோர் இப்போது அதை செய்யலாம். கேட்ட இடத்திலிருந்து வேண்டிய பணம் கிடைக்கும். வெளிநாடு செல்ல விரும்பும் நபர்கள் இப்போது முயற்சி செய்யலாம்.

கலைஞர்கள் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தவர்கள், சிறுசிறு துன்பங்களுக்கு ஆட்பட்டவர்கள் கூட இப்பொழுது சிரமங்கள் இல்லாத வாழ்க்கையை பெறமுடியும். புதிய வாய்ப்புகளை சரியான ஆட்களிடமிருந்து சரியான தருணத்தில் கிடைக்கப் பெற்று முன்னேறப் போகிறீர்கள். எதிர்காலத்தைப் பற்றிய கவலை அகலும்.

அரசியல்வாதிகள் கடந்த கால தவற்றை எண்ணாமல் புதிய முயற்சிக்கு வித்திடுவீர்கள். மன உலைச்சலால்  ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படலாம். மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். முன்னோர்கள் வழிபாட்டை முறைப்படி ஒழுங்குபடுத்தினால் உங்களை துரத்திக் கொண்டிருந்த தொல்லைகள் அகலும். 

பெண்கள் நினைத்தது நிறைவேறும் கால கட்டம். நீங்கள் ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேற்றி விடுவீர்கள். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியும், பெருமையும் உண்டாகும்.

மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு உண்டான வசதி வாய்ப்புகள் உண்டாகும். முயற்சிகள் வெற்றியாகும். ஆசிரியர்களின் பாராட்டுக்கு ஆளாவீர்கள். அனைவரிடமும் நன்மதிப்பு உண்டாகும். 

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

ரோகிணி:
இந்த மாதம் குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது.     

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:
இந்த மாதம் பெண்களுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். 

பரிகாரம்:  ஞாயிற்றுக்கிழமையில் சிவபெருமானை வில்வத்தால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 15, 16

அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9

{pagination-pagination}

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

வாக்கில் இனிமையினைக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் ராசிக்கு பஞ்சம,பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் ரண ருண சத்ரு ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும், அயன சயன போக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

குடும்பத்தை பொறுத்தவரையில்  அமைதியாகவும், நிம்மதியாகவும் இருக்கும். உங்கள் வாக்கிற்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். பணவரவும் தாராளமாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்தும் தங்கு தடையின்றி வந்து சேரும். முக்கிய நபர்களின் தலையீடு குடும்பத்தில் இருக்கும். குழந்தைகள் உங்கள் சொல் பேச்சு கேட்டு நடப்பார்கள். முன்னோர்களுக்கு செய்ய வேண்டியவற்றை தவறாமல் செய்வீர்கள்.

தொழில் ஸ்தானத்திற்கு குருவின் பார்வை இருப்பதால் புதிய தொழில் தொடங்கலாம். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.  இருக்கும் தொழிலை விரிவு படுத்துவது , வங்கிக் கடன் வாங்குவது போன்ற விசயங்களில் ஈடுபடலாம். வெளிநாட்டு தொடர்பான காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மேலிடத்தில் இருந்து நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலக விசயமாக வெளியூர் செல்ல நேரலாம்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். நல்ல சூழ்நிலைகள் அமையப் பெற்று அதனால் மன மகிழ்ச்சி உண்டாகலாம். மூத்த கலைஞர்கள் நல் ஆசி வழங்குவார்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சுய கௌரவம் காக்கப்படும்.

அரசியல்வாதிகள் அரசு சம்மந்தமான பிரச்சனைகளை மற்றவருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. யாரிடமும் எதைப்பற்றியும் விவாதிக்க வேண்டாம். சில விஷமிகளின் தொந்தரவு இருந்தாலும் சுலபமாக சமாளித்து விடுவீர்கள். 

பெண்கள் குடும்பத்தில் நிதானமாக நடந்து கொள்வது அவசியம். பெரியோர்கள் ஆலோசனைப்படி நடந்து  கொண்டால் எதிலும் நன்மையே உங்களுக்கு உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சுமை அதிகமாக இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் அதிக கவனத்தைச் செலுத்தவும். தேவையில்லாத விசயங்களில் கவனத்தைச் சிதற விட வேண்டாம். பெரியோர்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். 

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

திருவாதிரை:
இந்த மாதம் தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. 

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும்.

பரிகாரம்:  தினமும் பெருமாளை வணங்க வறுமை நீங்கி வாழ்வு வளம் பெறும். பகை விலகும். எதிர்ப்புகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : சனி, ஞாயிறு

சந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19

அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11

{pagination-pagination}
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

சங்கடங்களை சந்தோஷமாக மாற்றும் திறமையுடைய கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் இதுவரை சுக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயற்சி ஆகிறார். அவரின் பார்வையால் உங்கள் பாக்கியஸ்தானம் வலுப் பெறுகிறது. லாபஸ்தானத்திற்கும் ராசிக்கும் குருபார்வை கிடைக்கிறது.

குடும்ப சூழ்நிலையை பொறுத்தவரை நன்றாக இருக்கும். கணவன் - மனைவியிடையே அன்பும் அரவணைப்பும் அதிகரிக்கும். சிலர் வெளியூரில் பணியாற்றி  வந்தவர்கள் கூட குடும்பத்துடன் வந்து இணைவதற்கு வாய்ப்புகள் அதிகம். உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் உங்கள் வாழ்க்கைத்துணைக்கு யோகம். உங்கள் வாழ்க்கைத்துணையால் உங்களுக்கு யோகமான கால கட்டம் தான்.

தொழிலில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்துவருபவர்கள் மிகவும் கவனமாக இருந்து வர வேண்டியது அவசியம் அதிலும் முக்கியமாக பணவிஷயத்தில் கூடுதல் கவனம் தேவை வியாபாரம். போட்டிகளை சமாளிப்பதற்காக சிலர் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள் அத்தருணத்தில் அதிஜாக்கிரதையாக இருந்து வருவது நல்லது. சில தவறான முடிவுகள் பாதிப்பை  ஏற்படுத்திவிடக்கூடும்.

உத்தியோகம் வேலைக்குச் சென்று வரும் அன்பர்களுக்கு அனுகூலமான மாதம் இது. என்று சொல்ல வேண்டும் காரணம் எதிர்பார்த்த பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதனால் சிலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்குவதுடன் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும். 

கலைஞர்கள் சக கலைஞர்களுடன் சேர்ந்து விருந்து விழாக்களுக்கு சென்று வருவீர்கள் ஆடம்பரச் செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருதுகளுக்கு உங்கள் பெயரை பரிந்துரை செய்வார்கள். அரசியல் துறையினருக்கு உடல்நலம் பாதிக்கக்கூடும். சிறு பிரச்சினையானாலும் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம். தொண்டர்களின் ஈடுபாடு கட்சியை நல்வழியில் நடத்திச் செல்லும். அதனால் கவலைப்பட வேண்டாம்.

பெண்கள் நினைத்ததை நிறைவேற்றும் நேரம். குழந்தைகளின் வளர்ச்சி உங்களுக்கு பெருமிதமாக இருக்கும். பெரியோர்களின் அறிவுரையின் படி நிதானமாக நடந்து கொள்வது உங்களுக்கு நல்லதை நடத்தி தரும்.

மாணவமணிகள். வெளிநாடுகளில் கல்வி முடித்த மாணவ மணிகள் சிலர் தங்களது தாய் நாட்டிற்கு திரும்ப நேரிடும். வெகு நாட்களுக்குப் பின்பு உற்றார் உறவினர்களை சந்திப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

புனர்பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் தடைபட்ட நிதி உதவி கிடைக்கும்.  ஏற்கனவே வரவேண்டி இருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும்.

பூசம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள். வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும்.  

ஆயில்யம்:
இந்த மாதம் குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். குடும்பம் சார்ந்த விஷயங்களில் கலந்துரையாடும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது நன்மை தரும்.

பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மி காயத்ரி சொல்லி தினமும் லக்ஷ்மியை வணங்கி வர கடன் பிரச்சனை குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 20, 21

அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13, 14

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

தொட்டது எல்லம் பொன்னாக்கும் திறமை படைத்த சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் வெகுகாலமாக தடைப்பட்டு வந்த விஷயங்கள் அனைத்தும் இப்போது நிறைவேற வாய்ப்புள்ளது. அது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதுடன், மனநிறைவையும் அளிக்கும்.

குடும்பத்தில் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்ப சூழ்நிலையும் மனநிறைவைத் தரும். உறவினர்களிடையே மனக்கசப்புகள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் அவை அனைத்தும் இப்போது சரியாகி, உறவு வலுப்பெறும.. உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டு அதனால் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் நடக்கவிருக்கும் சுப நிகழ்ச்சி ஒன்றை தலைமை தாங்கி நடத்தி வைப்பீர்கள்.  சிலர் திருக் கோயில் கும்பாபிஷேகத்திற்கு உதவி செய்ய முன்வருவீர்கள். 

உத்தியோகம்  வேலை பார்த்து வரும் அன்பர்கள் சிலர் தற்போது இருக்கும் நிறுவனத்திலிருந்து வேறு ஒன்றிற்கு மாற வேண்டும் என நினைத்து அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருவீர்கள் அது வெற்றியைத் தேடித் தரும்.

தொழில் வியாபாரம்  வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டு வருவீர்கள் அதில் வெற்றி கிட்டும் பழைய பாக்கிகள் வசூலாகும்.  தேக்கமடைந்த பொருட்கள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்த  மனக் கசப்பு  விலகும்.

கலைத்துறையினர்  புதிய வீடு வாங்கும் கால கட்டம். அதற்கு தேவையான பணவசதி தங்கு தடையின்றி கிடைக்கும். சக கலைஞர்களிடம் பாராட்டும் நன்மதிப்பும் பெறுவீர்கள். அரசியல் துறையினர் கட்சி சம்பந்தமான முக்கிய முடிவுகளை  நீங்கள் துணிந்து எடுக்கலாம் அதனால் நன்மையே கிடைக்கும்.

மாணவமணிகள் மேற்கல்வி பயில விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவமணிகளுக்கு நற்செய்தி இந்தமாதம் வந்து சேரும். தாங்கள் விருப்பப்பட்ட கல்வி நிறுவனத்திலேயே இடம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.

பெண்மணிகளுக்கு குதூகலமான காலகட்டம். புதிய வேலைக்கு விண்ணப்பித்திருக்கும் பெண்மணிகளுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும். உங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தை  நீங்களே தக்க வைத்துக் கொள்வீர்கள். 

மகம்:
இந்த மாதம் குடும்பம் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் நடப்பதற்கு கிரகங்கள் சாதகமாக உள்ளன. பிரச்சினைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். உடன் பிறந்தவர்களும், குடும்பத்தில் உள்ளவர்களும் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். 

பூரம்:
இந்த மாதம் மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு  மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப் பெண் பெற முயற்சி செய்வீர்கள்.

உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். 

பரிகாரம்:  முருகனுக்கு அரளிப்பூ சாற்றி வணங்க எல்லா தடைகளும் விலகும். காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், புதன்

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23, 24

அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

{pagination-pagination}
                                           
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)

திட்டமிடுதலில் வல்லவரான கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். 

குடும்பத்தை பொறுத்த வரையில் நெருங்கிய நண்பர் ஒருவரின் வருகையினால்  குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனம் தேவை. கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடும். அவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். வருமானம்  சற்று குறைய வாய்ப்புள்ளது. 

அன்பர்கள் சிலர் தங்களது பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்க முயற்சி செய்து வருவீர்கள். அதில் சில தடைகள் ஏற்பட்டு பின்பு சரியாகும் திருமண வயதில் பெண்ணோ அல்லது இல்லையோ இருப்பின் அவர்களுக்கு வரன் தேடும் முயற்சிகளை இப்பொழுது மேற்கொள்ளலாம். 

உத்தியோகம் மேலதிகாரியிடம் கோபப்பட்டு பேசி வீண் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் சற்று பொறுமையாக இருந்து வர வேண்டியது அவசியம். சக ஊழியர்களால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனம் தேவை.

தொழில்ரீதியான படிப்பை தேர்ந்தெடுத்து படித்து வருபவர்கள் மிகவும் சிரமப்பட்டு படிக்க வேண்டியிருக்கும். நன்கு படித்து மனதில் பதியவில்லை என மனம் வருந்துவீர்கள். ஆனாலும் மனதிற்கு இனிமையான நிகழ்வுகள் ஏற்படும்.

பெண்மணிகளுக்கு சிக்கலான நேரமாகத்தான் இருக்கும். அலுவலகம் சென்று வரும் பெண்களுக்கு பதவி உயர்வு சற்று தள்ளிப் போகலாம். பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை வந்து போகும். மாமியார் - மருமகள் உறவு சுமூகமாக இருக்கும்.

கலைத்துறையினர் இசைக்கலைஞர்கள் நாட்டிய கலைஞர்கள் வித்வான்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். கலை நிகழ்ச்சிகளுக்காக சிலர் வெளியூர் பிரயாணம் மேற்கொள்ளவேண்டியிருக்கும். 

அரசியல் துறையினருக்கு ஜெயமான மாதம். கட்சிப் பணிகள் அனைத்தும் சுமுகமாக நடைபெறும். தொண்டர்கள் ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்து வருவார்கள்

மாணவமணிகள் வெளிநாடு சென்று மேற் கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். பயன்படுத்திக் கொள்வதினால் சிறந்த முன்னேற்றம் காத்துள்ளது. இது உங்களுக்கும் பெற்றோருக்கும் சந்தோஷத்தை அளிக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் வர வேண்டிய பணம் வந்துசேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும்.

அஸ்தம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த  நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள்.

சித்திரை 1, 2, பாதங்கள்:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.

பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் மஞ்சள் சாமந்திபூவை சிவனுக்கு அர்ப்பணித்து வழிபட நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன்

சந்திராஷ்டம தினங்கள்: 25, 26

அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18, 19

{pagination-pagination}
                                           
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

எச்சரிக்கையாகச் செயல்பட்டு ஏற்றம் பெரும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.

குடும்பத்தில் பண வரவிற்கு குறைவிராது என்றாலும் செலவுகள் சற்று அதிகரித்து காணப்படும் ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு அதனால் மருத்துவச் செலவுகளும் ஏற்படக்கூடும் இருப்பினும் வருமானம் நல்லபடி இருப்பதால் தங்களால் அதை சமாளித்து விட முடியும். நற்செய்தி எதையும் எதிர் பார்த்துக்கொண்டிருந்தாள் அதில் கிடைப்பதில் தடங்கலும் தாமதமும் ஏற்பட்டு பின்பு சரியாகும். 

உத்தியோகம் புதிய வேலைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் அன்பர்கள் நற்செய்தி எதையும் எதிர்பார்க்க முடியாது ஏற்கனவே பணியிலிருந்து வருபவர்களுக்கு பிரச்சனையில்லாத மாதம்  இது. எதிர்பார்த்த பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும்.

தொழிலில் சிறந்த முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். உற்பத்தியும் வருமானமும் எதிர்பார்த்ததைவிட சற்று கூடுதலாகவே இருக்கும். விஸ்தரிப்பு திட்டங்களுக்கான முயற்சியில் அதிக அளவில் பணத்தை செலவழிக்க வேண்டாம். வியாபாரம் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் நிறைய பொருட்களை வாங்கி விற்பீர்கள் .அதில் அதிக பணம் விரையமாகும் வருந்த வேண்டாம். லாபத்தை ஈட்டி விடுவீர்கள். 

பெண்மணிகள் சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். தேவையான பொன், பொருள் வந்து சேர வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி உறவு நல்லபடியாக வந்து சேரும். கலைத்துறையினர்  நடிகர்கள் நடிகைகள் இயக்குநர்கள் புதுப்பட வாய்ப்புகள் எதையும் எதிர்பார்க்க முடியாது ஏற்கனவே கிடைத்திருக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அரசியல்துறையினருக்கு மேலிடத்தின் நற்பெயர் கிடைக்கும். அதன் காரணமாக கட்சியில் முக்கிய பதவி ஒன்றை எதிர்பார்க்கலாம் தொண்டர்களின் அன்பும் ஆதரவும் அதிகரித்துக் காணப்படும். புதிய வாகனம் வாங்கும் முயற்சியை மேற்கொள்ளலாம். 

கல்லூரியில் பயின்று வரும் மாணவமணிகள் சிலருக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது வருமானம் குறைவாக இருந்தாலும் முதலில் அதை ஒப்புக்கொள்ளுங்கள்.

சித்திரை 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். 

சுவாதி:
இந்த மாதம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். 

விசாகம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம் வெளியூர்  பயணம் செல்ல நேரிடலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். 

பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெண்ணெய் சாற்றி வழிபட நன்மைகள் சேரும். வாக்குவாதங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், சனி

சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28

அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

{pagination-pagination}                                           

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

முயற்சிகள் மூலம் முன்னேற்றமடையும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.  பிள்ளைகளால் செலவும் ஏற்படும். 

குடும்பத்தில் பிறரிடம் கோபப்பட்டு பேசுவதைத் தவிர்த்திடுங்கள். தாங்களே எதிர்பாராத விதத்தில் கோபம் அதிகரித்து உணர்ச்சிவசப்படுவீர்கள். வெளியிடங்களுக்கு செல்லும்போது தங்கள் பணத்தை பத்திரமாகபார்த்துக் கொள்ளவும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும் திருமண வயது உள்ள கடக ராசி அன்பர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் நிச்சயிக்கப்பட சிறந்த வாய்ப்புள்ளது. திருமணமான பெண்கள் சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்க கூடும். நீதிமன்றத்தில் தங்கள் மீது வழக்குகள் ஏதாவது இருப்பின் அது உள்ளது உள்ளபடி என்ற நிலையிலேயே இருக்கும்

தொழில்துறையினர் எதையும் சிக்கல் இல்லாமலே சாதித்து விடுவீர்கள். வியாபாரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக செலவுகள் செய்து புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவீர்கள். தொழிலில் நல்ல லாபமும் அதற்கேற்றார் போல் கிடைக்கும்.

கலைத்துறையினர் வாய்ப்புகள் நல்லபடி கிடைத்தும் பயன்படுத்திக் கொள்ள முடியாதபடி சூழ்நிலை நிலவும். மூத்த கலைஞர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அதனால் இன்பமும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

அரசியல் துறையினர்  கட்சியில்  பிரச்சனைகள் எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இருந்தாலும் பொறுமையாக இருந்து வருவது அவசியம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவசரப்பட்டு முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

பெண்களுக்கு  தடைபட்ட காரியங்களில் தடைநீங்கி சாதகமாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். 

மாணவர்களுக்கு  கல்வியில் எதிர்பார்த்த  வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.    

அனுஷம்:
இந்த மாதம்  விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.

கேட்டை:
இந்த மாதம் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தை தரும். வீண் கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். 

பரிகாரம்:  சனிக்கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : வெள்ளி, சனி

சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30

அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23, 24

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருக்கும் தனுசு ராசியினரே இந்த மாதம் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தை தரும். வீண் கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான  போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த  மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும்.  போட்டிகள் குறையும், புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான  அலைச்சல் குறையும்.

கலைத்துறையினருக்கு எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். 

அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.

பெண்களுக்கு வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம். திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். 

மாணவர்களுக்கு கல்வியில்  முன்னேற்றத்திற்கு  இருந்த  முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். 

மூலம்:
இந்த மாதம் வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை உண்டாகும்.

பூராடம்:
இந்த மாதம் மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும்.  அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும்.

உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும். தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரியங்கள் கைகூடும். மன கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன்

சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 31

அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)

உயர்வான எண்ணங்களுடன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் நட்பு கொள்ளும் மகர ராசியினரே இந்த மாதம் எதிர்பார்த்த நல்ல செயல்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும்.  உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.

தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும்.

கலைத்துறையினருக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். 

அரசியல் துறையினருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். லாபத்தையும் பெறுவார்கள்.

பெண்களுக்கு உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும். 

மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும்.  சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் தடைகள் விலகும். கணவன் - மனைவி அன்னோனியம்  ஏற்படும். 

திருவோணம்:
இந்த மாதம் எதிர்பார்த்த பணவரவு கைக்கு வந்து சேரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். 

அவிட்டம் 1,2 பாதங்கள்:
இந்த மாதம் வார்த்தைகளை பிரயோகிக்கும் போது கவனம் தேவை. உடல்நலப் பாதிப்பு உள்ளவர்கள் உரிய நேரத்தில் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. 

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய், வெள்ளிக்கிழமையில் பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 6, 7

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்)

கடின உழைப்பை கண்டு அஞ்சாத கும்ப ராசியினரே நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். இந்த மாதம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். பணம் வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும்.  உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சனை தீரும். ஆர்டர் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள்.  மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

குடும்பத்தில் பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும்.

கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம்.

அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும். 

பெண்களுக்கு மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும். 

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற் றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில்  பங்கேற்கும் போது கவனம் தேவை. 

அவிட்டம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். பண வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும்.

சதயம்:
இந்த மாதம் ஆன்மீகச் சுற்றுலா சென்று வரலாம். எங்கும், எப்போதும் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள்.  

பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். பணதேவை பூர்த்தியாகும்.

பரிகாரம்:  கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி லட்சுமியை வழிபட கடன் பிரச்சனை தீரும். செல்வநிலை உயரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு

சந்திராஷ்டம தினங்கள்: 8, 9

அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

அடுத்தவர்களை அனுசரித்து சென்று காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் திறமை உடைய மீன ராசியினரே இந்த மாதம் துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள். மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.

குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

அரசியல் துறையினருக்கு விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். 

பெண்களுக்கு கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன்  பகை ஏற்படலாம். 

உத்திரட்டாதி:
இந்த மாதம்  தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். 

ரேவதி:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள்  உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை  ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. 

பரிகாரம்: பெருமாளை பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 10, 11

அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 31

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com