காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் 7ஆம் நாள் இரவு காளராத்திரி தேவி அலங்காரத்தில் ஞானபிரசூனாம்பிகா அம்மன் காட்சியளித்தார்.
ஆந்திரத்தில் உள்ள இக்கோயிலில் கடந்த 7 நாள்களாக நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஞானபிரசூனாம்பிகை அம்மன் சந்நிதி எதிரில் கொலு அமைத்து அதன் மீது அம்மனுக்கு தினந்தோறும் பல்வேறு அலங்காரங்களை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. தினந்தோறும் காலையும், மாலையும் அம்மனுக்கு ஷோடச (16 வகை) தீபாராதனைகளை குருக்கள்கள் காட்டுவர். அதைத் தொடர்ந்து, சுண்டல் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை மாலையில் ஞானபிரசூனாம்பிகை அம்மன் ரத்த பீஜாக்ஷரி என்று அழைக்கப்படும் காளராத்திரி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.